ராகுலை பிரதமராக்க மோடி இப்படி எல்லாம் பாடுபட கூடாது.
தீபக் மிஸ்ரா எனும் உச்சநீதிமன்ற நீதிபதியினை மாற்ற முடியாது என வெங்கய்ய நாயுடு சொல்லியிருக்கலாம்
ஆனால் இந்திய நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போயிற்றென்று இத்தேசம் நம்ப தொடங்கிவிட்டது
அந்த அவநம்பிக்கையினை நீக்கவேண்டுமென்றால் கட்டாயம் தீபக் மிஸ்ராவினை மாற்றியே தீரவேண்டும்
தோற்றிருப்பது தீர்மானம் அல்ல, மத்திய அரசு
இப்படி அடம்பிடிப்பதன் மூலம் நீதித்துறையில் தங்கள் பிடி இருப்பதை இந்தியா முழுக்க சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
இதனால் இருக்கும் அவப்பெயர் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறையாது
ஆனாலும் ராகுலை பிரதமராக்க மோடி இப்படி எல்லாம் பாடுபட கூடாது.
அந்த பிஜேபி பிரமுகர் சிறுமி பாலியல் தொந்தரவில் சிக்கி இருக்கின்றார், எப்படி சிக்கினார் என்றால் விஷயம் சுவாரஸ்யமானது
முதலில் விசாரித்திருக்கின்றார்கள் இவரோ நான் வக்கீல் அது இது என குதித்திருக்கின்றார்
அப்பொழுதும் பெரும் சிக்கலில்லை, நான் பிஜேபி பிரமுகர் என்றெல்லாம் குதித்திருக்கின்றார், பிஜேபி என்றவுடன் சந்தேகம் வந்திருக்கின்றது
அதோடு விட்டாரா என்றால் இல்லை, சனி உச்சி மண்டையில் இருந்து “எனக்கு கவர்னரை தெரியும்” என சொல்ல வைத்திருக்கின்றது
என்னது கவர்னரை தெரியுமா? ஒஹோ அவனா நீ என போட்டு சாத்தி உள்ளே வைத்துவிட்டார்கள்
சிக்கியது பாலியல் வழக்கில், அதில் கவர்னர் பெயரை சொல்லி தப்ப முடியுமா?
ஒழுக்கம் மட்டுமல்ல சுத்த விவஸ்தையும்
கெட்ட நபராகவும் இருப்பார் போல..
விஷயம் கவர்னருக்கு தெரியுமா என தெரியவில்லை,
தெரிந்தால் அய்யய்யோ அவன் முகத்தை கூட நான் பார்த்ததில்லை என அடுத்த பத்திரிகையாளர் கூட்டத்தை (ஆண் நிருபர்களை மட்டும்) அழைத்து நிச்சயம் கதறுவார்