ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது
இந்த ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என கலைஞர் இறுதி நிகழ்வில் நடந்த சர்ச்சைகள் குறித்து குதியோ குதி என குதிக்கின்றார்கள்
காவல்துறை அதன் பணியினை நன்றாக செய்தது, சந்தேகமில்லை ஆனால் மிகபெரும் கூட்டம் குவிந்தபின் அது திணறியது, முடிந்த அளவு பாதுகாப்பு கொடுக்கத்தான் செய்தது, அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கு வாழ்த்துக்கள்
சரி, ராஜிவ் எனும் அகில இந்திய காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பு என்பது தமிழக அரசு சம்பந்தபட்டதா? ஏன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கறை இல்லையா?
எப்படிபட்ட தமிழகம் இது?
இந்திரா ரத்தம் சொட்ட சொட்ட அடித்து விரட்டபட்டார், ராஜிவ் சிதறடிக்கபட்டு கொல்லபட்டார்
அப்படிபட்ட குடும்ப வாரிசு இங்கே வரும்பொழுது போதிய காவல் வேண்டும் என்றும், உறுதிபடுத்தபட்டே அவரை வரவழைக்கும் பொறுப்பு யாருக்கு உண்டு
நிச்சயமாக தமிழக காங்கிரசுக்கே உண்டு
அன்றிலிருந்தே இவர்கள் இப்படித்தான், முறையான பாதுகாப்பினை இந்திரா சம்பவத்திற்கு பின்பே வழங்கி இருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது
தெருவில் போகும் நாய் கூட கடிக்க யோசிக்கும் அங்கிள் சைமனே ஏதோ பெரும் மிரட்டல் இருப்பவர் போல பாதுகாவலருடன் வலம் வருகின்றார்
ராகுல் பாதுகாவலை உறுதி செய்யும் பொறுப்பு தமிழக காங்கிரசாருக்கும் உண்டு
ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு என்ன அக்கறை என்றால் கலைஞருக்கு சிலை வைப்பது
எந்த திமுகவினராவது இதே மண்ணில் கொல்லபட்ட ராஜிவிற்கு சிலைவைத்தார்களா என்று அந்த திருநாவிடம் கேட்பது யார்?
ராகுல் வந்திருந்தபொழுது பாதுகாப்பு குறைபாடு சந்தேகமில்லை, நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை
இந்திராவினையும் ராஜிவினையும் பாதுகாக்க தவறிய தமிழக காங்கிரஸ் இனி தக்க பாதுகாப்பு கொடுத்து ராகுலை இங்கு வரும்பொழுது பாதுகாக்கட்டும்
தனிபெரும் கவனம் எடுக்கட்டும்
தமிழ்க காங்கிரசாரே, உங்கள் அருமை தலைவனின் பாதுகாப்பிற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்து கிழித்தீர்கள்??
இவர்கள் ஒரு முயற்சியும் எடுக்கமாட்டார்கள், எல்லாம் தமிழக அரசு தானாக செய்யும் என மல்லாக்க கிடப்பார்கள், சிறப்பு கோரிக்கை கூட வைக்கமாட்டார்கள்.
ஆனால் ஏதும் சர்ச்சை என்றால் ஆளுக்கு முன்பு கிளம்பி ராகுலுக்கு அநீதி என்பார்கள்
தமிழக காங்கிரசார் இன்னும் திருந்த வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றது
ஆனால் நிச்சயம் திருந்தமாட்டார்கள், இந்த ராகுல் பாதுகாப்பு விஷயத்திலாவது திருந்தட்டும்
புது தொழில்நுட்பத்திலும், நவீன அறிவியல் கண்டுபிடிப்பாலுமே இந்தியா முன்னேற முடியும் : மோடி
பின்னே அதில்தான் இந்தியாவினை முன்னேற்ற முடியும்? பழம்புராண கதைகளாலும், பசுமாட்டு புராணத்திலுமா முன்னேற்ற முடியும்?