ராகுல் காந்தி மேல் லேசர் ஒளி
ராகுல் காந்தி மேல் லேசர் ஒளி அடித்த சர்ச்சை ஒரு வழியாக தீர்ந்துவிட்டது
அதை தீர்த்து வைத்திருப்பவர் காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் சிங்வி அவர் இப்படி சொல்லிவிட்டார்
”உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி எந்த கடிதமும் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது”
ஆக பாதுகாப்பு குறைபாடு மற்றும் லேசர் ஒளி தொடர்பாக வந்த செய்திகள் குறித்து தாங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
இது பற்றி உள்துறை அலுவலக அறிவிப்பு இப்படி வந்துள்ளது
“சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவருக்கு இது தொடர்பாக விசாரணை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விசாரணை மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவர், ராகுலின் தலையில்பட்ட பச்சை நிற ஒளி , ராகுலின் உரையை படம்பிடித்த ஒரு புகைப்பட நிபுணரின் கேமராவில் இருந்து வெளிப்பட்டதாக கண்டறிந்துள்ளார்.
இதன் பின்னர் இந்த தகவல் ராகுலின் தனி பாதுகாவலர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது”
இதிலிருந்து உங்களுக்கு என்னபுரிகின்றது?
காங்கிரஸ் இதுபற்றி புகாரே அளிக்கவில்லை ஆனால் உள்துறை அலுவலகம் அலறி அடித்து விசாரித்து உண்மையினை சொல்லிவிட்டது
ஆக ராகுலை காக்கும் பொறுப்பில் காங்கிரஸை விட பாஜகவுக்கு அதிக அக்கறை என்பது புரிகின்றதல்லவா?
