ராகுல் & ப்ரியங்கா
அது இந்திராவின் கடைசி காலங்கள் அவருக்கு உச்சகட்ட மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன அவர் கலங்கவில்லை, என்றேனும் ஒருநாள் கொல்லபடுவோம் என்பதை தெரிந்தே இருந்தார்
ஆனால் பொற்கோவில் சம்பவத்திற்கு பின் “இந்திரா வம்சத்தை வேறறுப்போம்” என சீக்கிய தீவிரவாதிகள் சூளுரைத்தனர், அவர்கள் போக இன்னும் பல அமைப்புகள் இதே மிரட்டலை விடுத்தன
முதன் முதலாக அஞ்சினார் இந்திரா, தன் வாரிசுகள் மேலான கவலை அதிகரித்தது. சஞ்சயின் மகன் வருண்காந்திக்கு ஆபத்தில்லை மேனகா சீக்கிய பெண்மணி போதா குறைக்கு இந்திராவுடன் நல்ல உறவில் இல்லை
ஆனால் ராஜிவின் குழந்தைகள் அப்படி அல்ல, தான் உயிரே வைத்திருக்கும் அக்குழந்தைகள் மேல் அடித்தால் தன்னால் தாங்கமுடியாது என்பதையும் எதிரிகள் அந்த இடம்பார்த்து அடிப்பார்கள் என்பதையும் உணர்ந்தே இருந்தார்
அதன்பின் அவரிடம் ஒரு பரபரப்பு காணபட்டது, பல்வேறு உளவுதகவல்கள் அதற்கு காரணம் என்பார்கள்.
திடீரென பள்ளி செல்லும் இந்திரா பேரபிள்ளைகளை கட்டிபிடித்து அழுவார், திடீரென தன் பயணதிட்டத்தை விட்டுவிட்டு பேரபிள்ளைகளிடம் ஓடுவார், அவர்கள் நலம் என்றதும் ஒருவித நிம்மதி அவரிடம் வெளிபடும்
நள்ளிரவில் கூட தூங்கிகொண்டிருந்த பேரபிள்ளைகளின் தலையினை கோதி கண்ணீர்விட்ட இந்திராவினை கண்ட சாட்சிகள் உண்டு
நாட்கள் நெருங்கின, தன்னை கொல்வார்களா இல்லை தன் வம்சத்தை ஒழித்து தன்னை கதறவைத்து பழிவாங்குவார்களா என நிம்மதியின்றி அவர் தவியாய் தவித்தார், உளவியலாக தொடுக்கபடும் நெருக்கடி இது, அந்த தாய் அதை அணுஅணுவாக அனுபவித்தார்
இறுதியில் அவர் விதி முந்திகொண்டது
ஆம் அந்த குழந்தைகளுக்கான ஆபத்து அப்பொழுது தற்காலிகமாக நீங்கியது
அடுத்து ராஜிவ் வந்தார் அவர்மேலும் பலருக்கு பகைவளர்ந்தது குறிப்பாக ஈழவிஷபாம்புகள்
அதில் உமாமகேஸ்வரன் ராஜிவின் குழந்தைகளை கடத்த திட்டமிட்டு வழிதேடினான், மிகுந்த பாதுகாப்பில் இரு குழந்தைகளும் வைக்கபட்டன, உமா மகேஸ்வரனால் நெருங்க முடியவில்லை. அவன் சாகடிக்கபடும் வரை அக்குழந்தைகளுக்கான மிரட்டல் தொடர்ந்தது

அடுத்து அமைதிபடையான யுத்தத்தை அடுத்து புலிகளுக்கும் ராஜிவுக்கும் மவுன யுத்தம் பொருந்தியது, இந்திராவிற்கு இருந்த அதே கவலை ராஜிவுக்கும் இருந்தது
அதன் பின் ஒரு நுட்பத்தை மேற்கொண்டார், எங்கு சென்றாலும் குடும்ப சகிதமின்றி தனியாக செல்ல தொடங்கினார், கொல்பவர்கள் தன்னை மட்டும் கொல்லட்டும் அக்குழந்தைகள் வாழட்டும் எனும் ஒருவித தியாகம் அதில் இருந்தது
அப்படியே ராஜிவும் கொல்லபட்டார்
இருவரும் அவர்களை காத்துவிட்டே உயிர்துறந்தனர்
நிச்சயம் பிறந்தது முதல் இன்றுவரை பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் வாழ்வது ராகுலும் பிரியங்காவும். சாதாரண மிரட்டல் அல்ல
பாட்டியும் தந்தையும் தங்களை காக்க உயிர்விட்டதை கண்ணால் பார்த்து வளர்ந்த மிரட்டல்
நினைக்கவே மனம் பதறும் விஷயம் அது
ஆனால் அதையும் தாண்டி விதி அவர்களை இழுத்து வந்திருக்கின்றது. நிச்சயம் சோனியாவிற்கு இவர்கள் அரசியலுக்கு வருவது விருப்பமான விஷயமே அல்ல அவர்களை ஒதுக்கித்தான் வைத்திருந்தார் அதுதான் பாதுகாப்பு என்றும் கருதினார்
ஆனால் பலவீனமான காங்கிரஸை வலுபடுத்த அவருக்கு வேறு தெரிவு இல்லை. அழுதபடியே ராகுலுக்கு தலைவர் பதவியினை அவர் விட்டுகொடுத்தபொழுது கலங்காதோர் யாருமில்லை
அந்த அழுகையின் உண்மையான காரணத்தை நல்ல இந்தியனும் , நல்ல காங்கிரஸ்காரனும் நிச்சயம் அறிவான்
பாஜகவின் அசுரபலத்தை ஒடுக்கவும், மாநில கட்சிகளின் அழிச்சாட்டியத்தை விரட்டவும் ராகுலுக்கு இன்னொரு கரம் தேவைபட்டது
பிரியங்காவும் களத்தில் இறக்கபட்டிருகின்றார் அவருக்கு கனத்த வரவேற்பும் இருக்கின்றது
நிச்சயம் அவரால் காங்கிரஸ் வலுப்பெறும் எனும் நம்பிக்கையும் துளிர்விட்டிருக்கின்றது
தங்களின் பாட்டியும் தந்தையும் இத்தேசத்திற்காக கொடூரமாக கொல்லபட்டதை பார்த்தபின்னும் நாட்டிற்காக வந்து நிற்கும் இருவரும் வாழ்த்துகுரியவர்கள்
வேறு எந்த கட்சியிலும் இப்படிபட்ட ரத்த சாட்சிகளை பார்க்க முடியாது, நிச்சயம் முடியாது
“உன்னால் முடியாததை உன் ரத்தம் சாதிக்கும்” என்றொரு பழமொழி மேல்நாட்டில் உண்டு
சரிக்கபட்ட அந்த ஆலமரங்களின் இடத்தை இந்த குருத்துக்கள் வளர்ந்து நிரப்பட்டும், தேசம் அதில் இளைப்பாறட்டும்
சிங்கங்கள் விட்டு சென்ற இந்த குருளைகளின் கர்ஜனையில் எதிரிகள் ஓடட்டும்
இந்திரா விட்டுசென்ற காரியங்களை இந்த இருவரும் சாதித்து காட்டட்டும், இந்த தேசம் அதற்கு கைகொடுக்கட்டும்
பிரியங்கா வருகைக்கு பின் பாஜக கும்பல் கதறுவதையும் பதறுவதையும் கண்டால் நேருவின் அழகான சிரிப்பு தெரிகின்றது
நல்லவர்கள் ஒருநாளும் மரிப்பதில்லை அவர்களின் கனவு நடக்காமல் போவதில்லை
நேரு கண்ட அமைதியான இந்தியா, இந்திரா கண்ட வலிமையான இந்தியா, ராஜிவ் கண்ட தொழில்நுட்ப இந்தியா மீண்டும் அமையும் காலம் நெருங்கி கொண்டிருகின்றது என்பது மகிழ்ச்சி
இந்திராவும் ராஜிவும் வாழாத நாட்களை எல்லாம் இவர்கள் வாழட்டும், அவர்கள் கண்ட கனவை எல்லாம் இவர்கள் நிறைவேற்றட்டும்
இந்திராவும் ராஜிவும் தங்களை ஓடி ஓடி காப்பாற்றியது இந்நாடு நலம்பெற வலிமைபெற என இருவரும் நிரூபிக்க காலம் வாய்ப்பளிகட்டும்