ராகுல் மிக கவனமாக இருக்கட்டும்
உபியில் ராகுல் மேல் துப்பாக்கி சூட்டுக்கு முன் விழும் லேசர் கதிர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருகின்றது, கொலைமுயற்சியாக இருக்கலாம் என்ற தகவல் பாதுகாப்பு அமைச்சிடம் கொடுக்கபட்டுள்ளது
இது பற்றி முழு தகவல் வெளியிடபடவில்லை என்றாலும் ராகுல் மிக கவனமாக இருக்கட்டும் அவருக்கான பாதுகாப்பு வலுப்படுத்தபடட்டும்
இத்தேசத்தின் இளம் தலைவர் அவர், இந்நாடு அவரை எதிர்பார்க்கின்றது, இந்த தலைமுறையினை அவர் வளமான இந்தியாவுக்குள் அழைத்துசெல்வார் என நம்புகின்றது
அவருக்கான பாதுகாப்பினை அரசு வழங்கட்டும், ராகுலும் எச்சரிக்கையாக இருக்கட்டும்
கோடிகணக்கான இந்தியரின் ஆன்ம பலமும் பிரார்த்தனையும் ராகுலுக்கு முழு பலமும் பாதுகாப்பும் அளிக்கட்டும்
அவர் நேருபோல் வாழட்டும் அவரை போலவே ஆளட்டும்