ராகுல் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்தும் இந்த அரசு விட மறுக்கின்றது
என்ன தான் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்துவிடடோம் என ராகுல் சொன்னாலும் அக்கொலையாளிகள் வெளிவருவது எளிதில் சாத்தியமில்லை
அவர்களை வெளியேவிட்டால் நிச்சயம் வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு வரும், நிச்சயம் வரும். அதனை பாஜக விரும்பாது
பாஜக விரும்பாது என்பதன் பொருள் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களை வெளிவிட முடியாது என்ற ஒற்றை அறிவிப்பில் தெரிகின்றது
ஆக காங்கிரசோ, பாஜகவோ ராஜிவ் கொலையாளிகளை வெளிவிடாது என்பது புரிகின்றது. ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி என மன்மோகன் சிங் சொல்லியிருந்தது மிக பொருத்தமானது
இப்பொழுது சிலரை காணவில்லை
யாரெல்லாம் என்றால் சைமன், வைகோ, திருமுருகன் , வேல்முருகன் கோஷ்டி
இவர்கள்தான் காங்கிரஸ் அரசு 7 தமிழர்களை வெளியிடவில்லை, திமுக அரசும் கண்டுகொள்ளவில்லை என ஒப்பாரி வைத்தார்கள்
இதோ ராகுல்காந்தி மன்னித்தும் கூட பாஜக அரசும், தமிழக அதிமுகவும் அவர்களை விட மறுக்கின்றது, இப்பொழுது இவர்கள் ஏன் அமைதி என்றால் விஷயம் ஒன்றுமில்லை
இவர்கள் காங்கிரஸ், திமுக என்றால் மட்டும் பொங்குவார்கள், பாஜக அதிமுக என்றால் வாய்மூடுவார்கள் என்றால், இவர்கள் எஜமான் யார் என முடிவுசெய்வது சிரமம் அல்ல
ஆக 7 தமிழர் விடுதலையில் மகா அக்கறையுள்ளவர்கள் என்ன சொல்ல வேண்டும்?
ராகுல் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்தும் இந்த அரசு விட மறுக்கின்றது, எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து அவர்களை விடுவிக்க தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என சொல்ல வேண்டுமா இல்லையா?
ஆனால் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் தமிழ் உணர்வு வித்தியாசமானது