ராசா நீ இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்தே

ராசா நீ இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்தே

எப்போ இருந்து கேக்குறீங்க?

இல்லய்யா, விவசாயிக்கு இவ்வளவு அக்கறைபடுறியே இவ்வளவு நாளும் உன்ன காணோமேப்பா

முதல்ல காலேஜில பெயில் ஆயிட்டே இருந்தேன்

நீ பாஸ் ஆகியிருந்தாதான் ஆச்சரியம் , சினிமாவுக்கு எப்பப்பா போனே?

அதுவா நான் முதல்ல 1990ல அப்பா பாரதிராஜாகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன்

அப்புறம்

1996ல இருந்து 2003 வரைக்கும் சினிமா எடுத்தேன், சல்லி பைசா தேறல‌

அட நாதாரிபயல, நீ விவசாயமே பாக்கலியா, சரி மேலே சொல்லு என்ன செஞ்சே?

2004ல முத்துராமலிங்க தேவர் விசிறியாயிட்டேன்

அட கருமாந்திரமே அப்புறம்?

கொஞ்ச நாள் காமராஜர் அய்யா பற்றி பேசினேன்?

தலை சுத்துது ராசா? அதுக்கப்புறம்

அப்புறம் திராவிட மேடைகள்ல பெரியார் பேரன் கார்ல் மாக்சின் தத்துபிள்ளையானேன்

உன்னை யாரும் கொல்லலியா?

இல்ல

அதுக்கப்புறம் என்னடா பண்ணினே?

அதுக்கப்புறம் இங்க இருந்து ஒரு கோஷ்டி ஈழம் போனது பிரபாகரன பார்க்க, அவங்களுக்கு கட்டுசோறு சுமந்துட்டு நானும் போனேன்

போயிட்டு வந்துட்டு?

கலைஞரை திட்டு காசு தாரோம்னாங்க‌, அள்ளி விட்டேன்

காசு வந்துச்சா?

வந்திச்சு, அப்போ பிரபாகரனும் இல்லியா அதுனால ஆமைகறி ஏக் 47ன்னு அள்ளிவிட்டேன்

அப்புறம்

ஜெயலலிதாவுக்கு வோட்டு கேட்டேன், இரட்டை இலைக்கு போடுங்கன்னு ஊரெல்லாம் சொன்னேன்

அதுக்கப்புறம்?

கச்சதீவு காவேரி ஈழம் எல்லாம் மீட்போம்னு கிளம்பினேன், இடையில வந்தேறி தெலுங்கர்னும் கொஞ்சம் காமெடி விஜயகாந்த் அய்யாவோட உரசல்னு போச்சி

அப்புறம்

கொஞ்ச நாளா முப்பாட்டன் முருகன்னு ஒரே ஆட்டம்

அட அப்புறம்?

அதுக்கப்புறம் தேர்தல் வந்துச்சி தேர்தல்ல ஒன்னும் தேறல‌

ஏன்

கச்சதீவு, ஈழம் காவேரின்னு ஒண்ணும் கை கொடுக்கல‌

அதுனால‌

இந்த தேர்தல்ல உங்கள காப்பாத்த போறேன்

அடுத்த தேர்தல்ல?

மீணவன், நெசவாளின்னு யாராவது சிக்குவான்

கசவாளி பயல, எவனாவது சாகணும் அல்லது அழனும் அதை வச்சி நீ அரசியல் பண்ணுவ‌

ஆமாம், மார்க்ஸ் என்ன சொல்லிருக்கார்னா

உன்ன தூக்கி போட்டு மிதிக்க சொல்லிருக்கார்

அய்யா நீங்க இன்னும் விளங்க்கிடல‌

விளங்கிட்டு ராசா, உனக்கு யார் அழுதாலும் செத்தாலும் வோட்டு வாங்கணும், எங்கள விட்டுரு ராசா, ஏற்கனவே ரொம்ப நொந்துட்டோம்

அய்யா நான் உங்கள‌ காப்பாத்துறேன்

முதல்ல உன்ன காப்பாத்திக்கையா ஈழத்துல நிறைய பேர் உன்ன கொலைவெறியோட தேடுறாங்களாம், ஏதோ இந்த சோகத்திலையும் சிரிக்கிறோம்னா அது உன்னலாதான் ராசா, தயவு செய்து எங்கள சிரிக்க வைக்க நீ வேணும்யா..