ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்
மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல
பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை
“அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று
எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக காங்கிரஸ் கூட்டணி இருந்து டெல்லிக்கு ராஜபக்சே வந்தால் கத்துவார்கள்
இப்பொழுது பழனிச்சாமி முதல்வராகவும், மோடி பிரதமராகவும் இருப்பதால் சத்தமே இல்லை
ராஜபக்சே சென்னை வந்து சாதாரணமாக டீ குடித்தாலும் இவர்கள் கண்டுகொள்ள போவதில்லை
இவர்கள் கண்டுகொள்ள வேண்டுமென்றால் மாநிலத்தில் திமுக ஆளவேண்டும் , மத்தியில் காங்கிரஸ் இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் ராஜபக்சே மெரீனா பக்கம் கிரிக்கெட் விளையாடினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்

—————————————————————————————————————————————–