ராஜாஜி அரங்கில் அம்மா ….
76 நாட்களுக்கு முன்
உயிரோடு பார்த்தவரை இன்று உடலாக பார்க்கும் போது நெஞ்சம் கலங்கத்தான் செய்கிறது
ஏதோ விஷேஷ வீட்டிற்கு வந்தது போல மன்னார்குடி கும்பல் கலகலப்பாக எல்லோருக்கும் வரவேற்பும் நன்றியும் சொல்லிகொண்டிருக்கின்றது
எந்த முகத்திலும் கவலையின் ரேகைகள் இல்லை
சொந்த குடும்பம் என்றால் நிலமை இவ்வளவு மோசமாக இருக்காது, இதுவரை நடந்ததை விட இதுதான் மகா சோகம்
அங்கு ஒரு சடலம் இருப்பதே அவர்களுக்கு சில நேரங்களில் மறந்துவிடுகின்றது
ஒருமுறை எழுந்து காரி துப்பிவிட்டு படுத்துகொள்ளுங்கள் அம்மா…
சித்தராமையா வந்திருக்கின்றார்,
நீதிபதி குமாரசாமி வந்ததாக தெரியவில்ல
மணிரத்தினத்தின் இருவர் படத்தின் காட்சிகள் கண்ணுக்குள் வந்து போகின்றன
அப்படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என மணிரத்னம் சொல்லிவிட்டார் என்பதால் அவருக்கு சிக்கலில்லை
இன்னொருமுறை அப்படத்தினை பார்க்கவேண்டும் போலிருக்கின்றது, 5 மணிக்கு மேல் பார்க்க வேண்டும்.
அமைதிபடை எல்லாம் முழு அரசியல் படம் அல்ல, இன்றுவரை வந்த படங்களில் மிக அழுத்தமான அரசியல் படம் இருவர் மட்டுமே
# மணிரத்னம் உண்மையில் மகத்தான இயக்குநர்.
ராகுல் காந்தி வந்ததாக தெரியவில்லை, வந்துவிட்டால் திருநாவுக்கரசரை அழைத்து மறுபடியும் அதிமுகவிற்கே தள்ளிவிட வாய்ப்புகள் அதிகம்
இனி அவர் அங்கு செல்ல தடங்கல் ஏதுமில்லை.
இன்னும் வராத பிரபலங்கள் ஆர்.எம் வீரப்பனும் கலைஞருமே
சுப்பிரமணியன் சாமி வரமாட்டார், வந்தால் நிலமை சிக்கலாகிவிடும், மனிதர் சத்தமே இல்லை ஏதும் அப்பல்லோ ஆவணங்களை நோண்டிகொண்டிருப்பார்
திடீரென என்னிடம் ஆதாரமிருக்கின்றது என கிளம்பலாம்..
சசிகலாவிடம் துக்கம் விசாரித்தார் மோடி, மனதிற்குள் அம்பானியின் நினைவு சடாரென வந்திருக்கலாம் அல்லது ஆர்எஸ்எஸ் நினைவு வந்திருக்கலாம்
பிரதமருக்கும் தாடி, முதல்வருக்கும் தாடி
இது முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த நாடு..
கூடும் கூட்டத்தையும் அவர்கள் காட்டும் துயரத்தினையும் கண்டால் ஒன்று புரிகின்றது,
ஏதோ ஒரு வகையில் மக்களை அவர் ஆழ பாதித்திருக்கின்றார்.
வாக்கிற்கு பணம் அளித்துதான் வென்றார் என்ற பிம்பமெல்லாம் நொறுங்கிகொண்டிருக்கின்றது
சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் அவர் சிக்கினாலும் அவை எல்லாம் ஜெயலலிதாவினை கொஞ்சமும் அசைக்காதது இப்படித்தான்.
தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் இவருக்காக செலுத்திய வாக்குகளை இனி இவர் படம் தாங்கியவர்களுக்கு மக்கள் செலுத்தாதவரை தமிழகத்திற்கு நல்லது
தமிழக மக்களும் விவரமானவர்கள்தான்.
சசிகலா புஷ்பா வந்ததாக தெரியவில்லை, மாறுவேடத்தில் வந்திருக்கலாம்.
மணல் தொழிலினை நடத்த உதவி தன்னை உச்சத்தில் தூக்கி வைத்தற்காக நன்றி சொல்ல ஆறுமுகச்சாமியோ, வைகுண்ட ராஜனோ வந்ததாகவும் தெரியவில்லை
நன்றிகெட்ட உலகமடா மனிதா…
மன்னார் குடி கும்பலின் எல்லா உறுப்பினர்களும் அணிவகுத்து நிற்கின்றார்கள், நடராஜன், சுதாகரன், திவாகரன்,இளவரசி, விவேக் என எல்லோரும் ஆஜர்.
சின்ன எம்ஜிஆர் என்றவரை மட்டும் காணவில்லை
பிரதமர் வருகின்றார், கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லா இந்த கும்பலிடம் அவர் தன் இரங்கலை தெரிவிப்பார்.
ஒரு பத்திரிகை ஜெயலலிதாவிடம் படிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? என்பதை பட்டியலிட்டுள்ளது
நம்பிக்கை, கண்டிப்பு, உறுதி என அது நிறைய சொல்கிறது
இது எல்லாம் இருக்கட்டும், ஒருவன் படிக்க வேண்டிய பாடம் “மாட்டி கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி?”
இதனை ஜெயலலிதாவிடமிருந்து நிச்சயம் படிக்க முடியாது.
அதனை கலைஞரிடமிருந்து மட்டுமே படிக்க முடியும்.