ராஜிவிற்கு பின் இந்தியா தடுமாறுகின்றது

அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்களை உள்நாட்டு பிரச்சினை என விடகூடாது, எதிரி நாடுகள் கால்பதித்தால் நாட்டின் பாதுகாப்பு அவ்வளவுதான்

கியூபாவில் ரஷ்யா கால்பதிக்க முயன்றபொழுது கென்னடி அப்படி சீறினார், தைவானில் அமெரிக்கா கால்வைக்க முயலும்பொழுதெல்லாம் சீனா சீறும்

ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா ஏவுகனைகளை நிறுவ முயன்றால் ரஷ்ய எச்சரிக்கை கடுமையாயிருக்கும்

இவை எல்லாம் விழிப்பான நாடுகள் செய்வது

ராஜிவிற்கு பின் இந்தியா தடுமாறுகின்றது, அதுவும் மோடி மகா தூக்கம்

இலங்கை, நேபாளம் என அண்டைநாடுகளின் மீதான இந்திய‌ பிடி இப்பொழுது நழுவிவிட்டது மாலத்தீவும் இனி அம்போ

மாலத்தீவின் எதிர்கட்சி இந்தியாவினை அழைத்தாலும் ஆளும் கட்சி நட்பு நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்கின்றது

இது இந்தியாவிற்கு மிகபெரும் பின்னடைவு, இந்திய உளவுதுறை என்பது பிரதமருக்கு கீழ் செயல்படும் துறை என்பதால் இந்த சறுக்கலில் பிரதமருக்கும் இந்திய உளவுதுறைக்கும் பொறுப்பு இருக்கின்றது

இதனை சொன்னால் வம்புக்கு வருவார்கள், இனி எதிர்கட்சிகள் சொன்னால் காந்தி இல்லா இந்தியா, காங்கிரஸ் இல்லா இந்தியா, என சம்பந்தமில்லாமல் பேசிகொண்டிருப்பார் பிரதமர்

காந்தி, காங்கிரஸ் இல்லா இந்தியா என்பதல்ல விஷயம், இந்தியா கட்டுபாடில்லா தெற்காசியா என்றொரு நிலை வந்தால் நிச்சயம் அது இந்தியாவிற்கு நல்லதல்ல‌