ராஜிவ் கொலை பற்றி புலி கோஷ்டியின் இம்சை

அந்த புலி கோஷ்டியின் இம்சை ஆரம்பித்துவிட்டது, ராஜிவ் கொலை புலிகள் செய்யவில்லை எனும் பொய்யினை என நிறுவ படாத பாடு படுகின்றார்கள்

ராஜிவினை கொன்றபின் சிவராசன் ஏன் இலங்கை செல்லாமல் பெங்களூர் சென்றான் என வாதிடுகின்றார்களாம்

சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் நடந்த வயர்லெஸ் உரையாடல்படி ராஜிவ் கொலையினை உள்ளூர் ஆட்களை வைத்து செய்யவேண்டாம், அவர்களோடு ஒரு தொடர்பும் வேண்டாம், நம் ஆட்களை மட்டுமே வைத்து செய் என்பது சிவராசனுக்கான உத்தரவு

ஆனால் அவனுக்கோ அது எளிதாகபடவில்லை, பத்மநாபாவினை கொன்றது போல ராஜிவினை கொல்வது எளிதில்லை

அதனால் நளினி போன்ற உள்ளூர்வாசிகளை வளைத்து திட்டத்தை நிறைவேற்றினான், ஆனால் அவன் சிக்கியதும் அப்படியே, அந்த ஹரிபாபுவினை எல்லாம் கடைசி கட்டத்தில் கூட்டி சென்றிருக்க அவசியமே இல்லை

நளினிதான் ராஜிவ் கொலைதொடர்பான தகவலை முதலில் கொடுத்தவர்

ராஜிவ் கொலையினை தொடர்ந்து ஏற்பட்ட கடற்காவலில் அவனால் முதலில் செல்ல முடியவில்லை, ராஜிவினை கொன்றது புலிகள் என செய்திகள் வர புலித்தலமை கடும் அப்செட் ஆனது, அவன் சென்றாலும் பிரபாகரனால் கொல்லபட்டிருப்பது உறுதி

ராஜிவ் கொலை விசாரணையில் தமிழகத்தில் 24 புலிகள் தற்கொலை செய்தனர், சிவராசனும் அப்படி செத்து தொலையட்டும், தடயங்களை விட்ட அவன் சாகட்டும் என்றே புலிதலமை இருந்தது

இப்படி உண்மைகள் இருக்க, அந்த கோஷ்டி சிவராசன் ஏன் இலங்கைக்கு தப்பவில்லை என சொல்லிகொண்டே இருக்கின்றது

சென்றிருந்தாலும் அங்கு அவனுக்கு கடும் தண்டனை கிடைத்திருக்கும் அதனால் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு தப்பவே அவன் நேபாளம் நோக்கி சென்றான்

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து அபாண்ட பொய் புத்தகம் எழுதுகின்றார்கள், அதன் மொத்த தகவலும் வரட்டும் , ஒரு பாயின்ட் விடாமல் அடித்த்துவிடலாம்