ராதாபுரம் தொகுதி மட்டும் ஏன் அமைதியாக இருக்கின்றது?
ஒரு காலத்தில் தமிழகத்தின் ஒரே சுயேட்சை எம் எல் ஏவினை தேர்ந்தெடுத்து தமிழகத்தினை திரும்பி பார்க்க செய்தது ராதாபுரம் தொகுதி
இன்றோ சசிகலாவிற்கு எதிராக பெரும் அலையடிக்க, அவர் ஆதரவு அதிமுக தொகுதி எம் எல் ஏக்களை கொண்ட மக்கள் எல்லாம், தங்கள் தொகுதி எம் எல் ஏக்களை கண்டிக்கவும் , விரட்டவும் தொடங்கியுள்ள நிலையில்..
மக்களின் எதிர்ப்புக்கு பயந்தே எம் எல் ஏக்கள் எல்லாம் பன்னீரிடம் ஓடி செல்லும் நிலையில்..
ராதாபுரம் தொகுதியில் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை
சுயேட்சை எம் எல் ஏ, இன்னும் பல பெரும் எதிர்ப்புகள் என தன் தனித்துவம் காட்டும் அத்தொகுதி ஏன் இப்படி ஆகிவிட்டது?
எந்த புள்ளியில் சிக்கிவிட்டது
இத்தனைக்கும் ராதாபுரம் தொகுதி எம் எல் ஏ, நடுநிலை அல்ல, அப்பட்டமான சசிகலா ஆதரவினை வள்ளியூர் பஜார் புளியமரத்தில் பேனராக தொங்கிகொண்டு சொல்லிகொண்டிருப்பவர்
எல்லா அதிமுக தொகுதிகளும் பொங்கிகொண்டிருக்க, ராதாபுரம் மட்டும் ஏன் அமைதியாக இருக்கின்றது?
இப்படியே சென்றால் சசிகலா போட்டியிடும் தொகுதியாக அது மாறினாலும் ஆச்சரியமில்லை.
ராதாபுரம் தொகுதி அதனைத்தான் விரும்புகின்றதா? அல்லது எம் எல் ஏ இன்பதுரை விரும்புகின்றாரா?
அப்பாவு எனும் பெரும் பிம்பத்தையும் மீறி இன்பதுரையினை ராதாபுரம் தொகுதி தேர்ந்தெடுத்தது.
கட்சி பாசத்தில் அப்பாவும் சில செயல்கள், சில வார்த்தைகள் அவருக்கு எதிராயின என்றால், சசிகலா மீதான விசுவாசத்தில் இன்பதுரையும் அதே தவறினை நோக்கி செல்கின்றார்
ராதாபுரம் தொகுதிக்கென்ன?
முன்பே சொன்னது போல அது சுயேட்சை வேட்பாளரையே தேர்ந்திடுத்து ஆச்சரியம் கொடுத்த தொகுதி.
சசிகலாவினை ஆதரிக்கும் எம் எல் ஏக்களை தொகுதி பக்கம் வரவிடாமல் எதிர்க்கும் மக்கள் , அவர்களோடு விரட்டவேண்டிய சிலரின் பட்டியலை ஜெயா டிவி வெளியிட்டுகொண்டிருக்கின்றது
தா.பாண்டியன், பழ.நெடுமாறன் போன்றோரின் சசிகலா ஆதரவினை பேட்டியாக எடுத்து அது ஒளிபரப்புகின்றது
அதாவது மக்களே சசிகலா எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல இவர்களையும் குறித்துகொள்ளுங்கள் என மறைமுகமாக தமிழகத்திற்கு சொல்கின்றது ஜெயா டிவி.