ராமசந்திரனுக்காவது ஒரு படம் வந்தது, ஜெயாவிற்கு அதுவுமில்லை
எம்ஜிஆர் சாகும்பொழுது பல சர்ச்சைகள் வந்தன, பல வதந்தியும் வந்தது.
அதில் ஒன்று ராமசந்திரனுக்கு மோரில் விஷம் வைத்தார் ஜாணகி என முதல் சர்ச்சை வந்தது, கிளப்பிவிட்டது யாரென்றால் சாட்சாத் ஜெயலலிதாதான்.
இன்னொரு வதந்தி தமாஷானாது, அதாவது ராமசந்திரன சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலே தங்கிவிட்டு, தன்னை போல இருந்த ஒருவனை தமிழகத்திற்கு அனுப்பி தன் கட்சி நிலவரத்தை அறிந்ததாகவும், அவனை இவர்கள் கொன்றுவிட்டதாகவும் ஒரு வதந்தி.
அப்படியானால் ஒரிஜினல் ராமசந்திரன் எங்கே? இங்கு வந்தால் கொன்றுவிடுவார்கள் என்று அங்கேயே செத்தாரோ என்னமோ?
காரணம் ராமசந்திரன் அமெரிக்கா சென்றதுமே, அவர் அவ்வளவுதான், என்னை முதல்வராக்குங்கள் என ராஜிவ் முன்னால் நின்றவர் ஜெயலலிதா.
அதனால் நான் சாகவில்லை என தொப்பியும், பல்செட்டும் இல்லாமல் வரலாற்று சிறப்புமிக்க படத்தை எல்லாம் தமிழக செய்திகளில் வரவைத்து பெருமூச்சு விட்டார் ராமசந்திரன்.
அந்த ராமசந்திரன் படத்தை பார்த்ததில் தமிழ்நாட்டு கிழவிகள் அன்றே அவர் செத்ததாக நினைத்து கொண்டனர், திமுகவினருக்கோ அப்படத்தை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.
உள்ளூர ஜெயா கும்பலுக்கும் ஒரு ஹேப்பி, அவரை அப்படி தமிழக மக்களிடம் காட்டி அவமானபடுத்தியாயிற்று என்றொரு சந்தோஷம்.
இன்னொரு வதந்தி ராமசந்திரன் அங்கே இறந்துவிட்டதாகவும், ஆட்சிக்காக இன்னொருவனை செட்டப் செய்து கொண்டுவந்ததாகவும் பரவியது.
சரி ராமசந்திரன் செட்டப்பாக இருக்கட்டும்? கூடவே வந்த ஜாணகியும் செட்டபா? என்று யாரும் கேட்கவில்லை.
இப்பொழுது ஜெயலலிதாவிற்கும் பல வித வதந்திகள்.
ஜெயலலிதா மட்டும் வெளிநாட்டு சிகிச்சைக்கு சென்றிருந்தால் இன்னும் பல சுவாரஸ்ய வதந்திகள் கிடைத்திருக்கும்
ஆனால் ராமசந்திரனுக்காவது ஒரு படம் வந்தது, ஜெயாவிற்கு அதுவுமில்லை