ராமசந்திரன் ஆட்சியில் கூட மாநில அதிகாரம் காக்கபட்டது
1978ம் ஆண்டு இந்தியாவினை பதறவைத்த சம்பவம் விழுப்புரம் பக்கம் நடந்தது, 12 பேர் சாதிகொடுமையால் படுகொலை செய்யபட்டார்கள்
நாடு குலுங்கியது, இந்தியா முழுக்க அதிர்வுகள் வர மத்திய அரசு ஒரு குழுவினை அனுப்ப ஏற்பாடு செய்தது, அப்பொழுதுதான் அப்பொழுது முதல்வராக இருந்த ராமசந்திரனுக்கு திடீரென்று நினைவு வந்தது
நாமல்லவா முதலமைச்சர்? டெல்லியிலிருந்து குழு வந்தால் நான் என்ன காராச்சேவு கடித்து கொண்டிருக்கவா இருகின்றேன், என பொங்கி எழுந்தார். மாநில அரசே விசாரிக்கும் என்றால் அதன் பின் மத்திய குழு வரவில்லை
மாநில முதல்வரின் அதிகாரத்தை அவர் அதன்பின் எந்நிலையிலும் அவர் விட்டுகொடுக்கவில்லை
இச்சம்பவத்திற்கு பின் ராமசந்திரன் சிறு பிரச்சினை என்றாலும் அடிதடி பாணியினை கையாண்டார், அது பல இடங்களில் தெரிந்தது, மெரீனாவில் மீணவர்களை அடிக்கும் பொழுது நன்றாக தெரிந்தது
காமெடி ஆட்சி என்றாலும் ராமசந்திரன் இந்த விஷயங்களில் சரியாக இருந்தார்
இப்பொழுது அந்த பேராசிரியியை விவகாரம் தொடர்பாக ஆளுநர் விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டிருக்கின்றார், மாநில முதல்வர் வழக்கம் போல் அமைதி
காமெடியன் என்றாலும் ராமசந்திரன் ஆட்சியில் கூட மாநில அதிகாரம் காக்கபட்டது, இவர்கள் ஆட்சியில் அது சுத்தமாக இல்லை
என்ன சொல்வது
அந்த காமெடியன் ராமசந்திரன் படத்தை கூட தொடுவதற்கு இவர்களுக்கு அருகதை இல்லை என சொல்லிவிட்டால் இவர்கள் தகுதியினை உலகமே புரிந்துகொள்ளும்