ராமதாஸ் பொறுக்கவில்லை

விக்கிரவாண்டி இடைதேர்தல் தொடர்பாகத்தான் ராமதாஸும் முக ஸ்டாலினும் மோத தொடங்கினார்கள் , வன்னியருக்கான உள் இட ஒதுக்கீடு என தன் அடிமடியிலே ஸ்டாலின் கை வைத்ததை ராமதாஸ் பொறுக்கவில்லை

இடம் பார்த்து முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என திருப்பிவிட்டார், திமுக அது பட்டா நிலம் என நிரூபித்துவிட்டு அடுத்த அடியினை தொடுக்கின்றது

பொதுவாக‌ ஆபிசில் மேனேஜருக்கு டைப் அடிக்கும் பெண் மீதும், கட்டட மேஸ்திரிக்கு சித்தாள் மேலும் ஒரு ஈர்ப்பு வருவது போல சில டாக்டர்களுக்கு நர்ஸ் மேல் வரும்

இதெல்லாம் தொழில் நன்றாக நடக்க வேண்டும் எனும் தொழில் சார்ந்த ஈர்ப்பு அன்றி வேறல்ல‌

பழைய நர்ஸ் ஒருவர் கதையினை திமுக தரப்பு தூசு தட்டுகின்றது, விஷயம் நர்சுக்கு தெரிந்து ஆந்திர மாநில சிவபார்வதி போல அந்த “சின்னம்மா” களத்துக்கு வராத வரை நல்லது

இதற்கு பாமக தரப்பு எந்த நடிகை அல்லது மீடியா பெண்ணை கோர்த்துவிடுமோ தெரியாது, திமுகவின் தொழில் ரகசியம் அவர்களுக்கும் அத்துபடி

மொத்தத்தில் இருவரும் சமூக நீதி மற்றும் பெண் விடுதலையினை நன்றாகவே காத்து கொண்டிருக்கின்றார்கள்