ராமாயணம் பார்ப்பன நூலா?
எதிர்பார்த்தது போல் ராமன் சம்பூகன் எனும் சூத்திரனை ஏன் கொன்றான், அவன் ஆரிய பார்பானிய சண்டாளன் அவன் சூத்திரன் தவம் செய்வது பொறுக்காமல் கொன்றான் என கிளம்பிவிட்டது ஒரு கோஷ்டி
முதலில் ராமனே ஒரு பிராமணன் அல்ல ஷத்திரியன், அவனிடம் சம்பூகன் மேல் பிராது கொடுத்த நாரதரும் பிராமணர் அல்ல, ஒரு வேலைக்காரியின் மகன்
சம்பூகன் தவமிருந்தான், கவனிக்கவும் தவம் பிராமணுக்குரியது என யாரும் அவனை தடுக்கவில்லை எல்லா சாதியும் தவம் இருக்க அனுமதி இருந்தது
ஆனால் அவன் நோக்கம் விபரீதமானது, சம்பூகனின் தவநோக்கம் தர்மம் தளைக்கவோ இல்லை அநீதி ஒழியவோ இல்லை மாறாக வேத சாஸ்திரதிற்க்கு எதிர்மாராகவும், வேதம் ஒழியவும், அவனே புது வேதம் எழுதவும், இன்னும் பல புரட்சி செய்யும் தவமாய் இருந்தது
புரட்சிகள் என பூலோகத்தில் பொய் சொல்லி அட்டகாசம் செய்யலாம், கடவுளிடம் முடியாது
புரட்சியால் மேற்கில் சூரியன் உதிக்கட்டும், நண்பகலில் நிலா வரட்டும் என்பதெல்லாம் அபத்தம் அது இயற்கையினை மீறிய செயல்
சம்பூகனின் தவத்தால் தர்மம் அழிந்து அதர்ம சக்திகள் தலைதூக்கின, தன் வாழ்நாளெல்லாம் அதர்மத்தை அழித்த ராமன் இதை விடுவானா? பொதுநலமும் தர்மமும் இல்லாமல் சுயநலத்தோடு தவம் இருந்ததால் சம்பூகன் கொல்லபட்டான்
அதுவும் இது உத்திர காண்டம் எனும் பிற்கால சேர்க்கையே
ராமன் சாதி பார்த்தா அனுமனுடன் பழகினான்?
ராமன் சாதி பார்த்தா குகனுடன் நண்பனானான்?
ஆக சாதி பார்த்து சூத்திரனை ராமன் கொன்றான் , அவர் பார்பானிய அடிமை என்பதெல்லாம் ஈரோட்டு ராம்சாமி கோஷ்டியின் விபரீத சிந்தனைகளின் முடை நாற்றம்
உண்மையில் ராமன் சத்திரியன், ஆனால் ராவணன் பிராமணன். அந்த பிராமணனையே அதர்மம் செய்தான் என ஒழித்துகட்டியவனே ராமன்
அந்த ராமனின் கதையினை எழுதியவன் கீழ் சாதியில் கூட சேராத மிக தாழ்ந்த சாதியான வேடுவன் வால்மீகி
இதில் எங்கிருந்து ராமாயணம் பார்ப்பன நூல் என சொல்லமுடியும்? ராமன் பார்ப்பானிய அடிமை என எப்படி சொல்லமுடியும்?