ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன
ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன, ராஜிவ் கொலைக்கு பின் தடை செய்யபட்ட நிலையிலும் புலிகளுக்கு இங்கிருந்து ஆயுதங்கள் சென்று கொண்டே இருந்திருக்கின்றன
ராமேஸ்வரம் மீணவர்களை சிங்களபடை ஏன் விரட்டியது என்பதற்கும், இறுதி யுத்தத்தில் பழ.நெடுமாறன் அனுப்பிய கப்பலை ஏன் சிங்களம் தடுத்தது என்பதற்கும் இனி விடை தெரியாமல் இருந்தால்தான் ஆச்சரியம்
அந்த அளவு தமிழகம் அவர்கள் களமாக இருந்திருக்கின்றது, புலிகளின் பணம் விளையாடி இருக்கின்றது, எல்லா வகை ஆயுதங்களும் சிலரின் வாய்களையும் புலிகளால் இங்கு வாங்கி இருக்க முடிகின்றது
ஒரு வேளை ஈழம் அமைந்திருந்தால் என்னாயிருக்கும்?
காவேரி வரவில்லையா? ஸ்டெர்லைட்டா? 8 வழிச்சாலையா? அதே ஆயுதங்கள் இங்கே இந்தியாவிற்கு எதிராக திருப்பிட பட்டிருக்கும்
மாபெரும் அழிவுகள் இங்கே நிகழ்ந்திருக்கும்
ராமேஸ்வரம் மட்டுமல்ல இன்னும் ஏராளமான இடங்களில் இதே ஆயுதபுதையல் அகபடலாம், அவ்வப்போது சிக்கும் பொறுத்து பாருங்கள்
(அடிக்கடி ஏ.கே 47, ஏகே 74 சுட்டு பழகினேன் என சொல்லிகொண்டே இருக்கும் சைமனுக்கும் சில இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு, பிரபாகரனுக்கும் அவருக்குமான நெருக்கம் அப்படி)