ராமேஸ்வரமும் இலங்கையும் : 01
ராமேஸ்வரமும் இலங்கையும் : 01
1970 வரை இது பெரும் பிரச்சினை அல்ல, கச்சத்தீவு (கச்சம் என்றால் ஆமை என பொருள்) எனும் மனிதர் வாழா தீவினை, (அங்கு நல்ல நீர் கிடைக்காது),
இலங்கைக்கு கொடுத்தபின்னும் பெரும் பிரச்சினை இல்லை. இலங்கை மீணவர்களும், இந்திய மீணவர்களும் சந்திக்கும் இடமாகவே அது மாறிற்று,
அதுவும் மீணவர்களின் பாதுகாவலர் எனநம்மபடும் புனித அந்தோணியாரின் திருவிழா அங்கு இருவராலுமே நடத்தபட்டது, மதங்களை தாண்டி. எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.
1980களில் தமிழக போராளிகள் தமிழகம் வந்து செல்லும்பொழுது, பாதுகாப்பு சோதனை எனும் பெயரில் சிங்கள கடற்படை வந்து நின்றபின்புதான் சிக்கல் தொடங்கிற்று, அதாவது போராளிகளுக்கு இதுதான் சப்ளை ரூட் என்பது சிங்களரின் நம்பிக்கை என ஏகபட்ட சிக்கல்கள். போராளிகளுக்கு இந்தியாவின் ஆசி உண்டென்பது பரம ரகசியம் அல்ல.
ஆனால் பின்னர் நிலமை மகா மோசமாயிற்று, 1983க்கு பின் புலிகள் விஸ்வரூபமெடுக்க பதிலுக்கு சிங்களமும் மல்லுகட்ட, முதல் துப்பாக்கி சூடு 1983ல் தொடங்கிற்று.
அமைதிபடை காலத்திலும், பின் 1991க்கு பின் இந்திய ஈழபார்வை முற்றிலும் மாறிபோக, புலிகளின் கையும் கடல்பரப்பில் ஓங்கி நிற்க இந்தியா தடுமாறிற்று.
பின் அவர்கள் எல்லை என ஒன்றை காட்டி, இதனை தாண்ட கூடாது என்றனர், பின் இன்னும் மோசமாக கச்சத்தீவு பக்கம் வரகூடாது என்றனர், உண்மையில் இந்திய ஒப்பந்தபடி இலங்கையின் கச்சதீவிற்கு இந்தியர்கள் எப்பொழுதும் செல்லலாம், விசா தேவை இல்லை என்பது குறிப்பிட தகுந்த விஷயம்.
இந்த கடல்கட்டுப்பாடு புலிகள் கையில் சென்றபின் சிக்கல் தொடங்கியது, அடிக்கடி சிங்கள கடற்படையினை தாக்குவர், சிங்களருக்கு ஒரே நம்பிக்கை, தமிழகத்திலிருந்துதான் பொருள் இவர்களுக்கு வருகின்றது, போட்டு சாத்துவோம், 4 அப்பாவிகள் செத்தாலும் 40 கடத்தல்காரர் பயப்படுவார்கள்.
1995ல் இதனை குறிவைத்துதான் சிங்களம் யாழ்பாணத்தை மீட்டது, மீட்டபின்பு அந்த கடல்பாதையினை தன் கட்டுபாட்டில் வைத்துகொண்டது, யாழ்பாண மீணவர்களும் பாதிக்கபட்டார்கள், அதாவது சிங்கள மீணவர்களுக்கு முன்னுரிமை வழங்கபட்டது, ஒரு மாதிரியான அரசியல் இது.
இதில் அடிக்கடி இந்திய மீணவர்கள் எல்லை தாண்டுவதும், அவர்கள் சுடுவதும் நடந்துகொண்டே இருக்க, இந்தியா கண்டனம் தெரிவிக்கும் ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை, காரணம் உலக சிக்கல், அரசியல் இன்னும் ஆயிரம் அட்டகாசங்கள், புலிகள், ராணுவம், கடத்தல்கள் என ஏக சிக்கல்.
ஆனால் மோடி வந்தபின் ஒருவிஷயம் குறைந்தது அது சுட்டுகொல்வது. நிச்சயம் மோடியின் சாதனை அது.
அதன் பின் இப்பொழுது சுட தொடங்கிவிட்டார்கள்.
போர் முடிந்த முடிந்தபின்னும் இந்த சண்டைகள் ஏன்? இப்பொழுது புலிகள் இல்லை, ஆனால் பிரச்சினைகள் ஏன்? என்றால் பெரும் சிக்கலான விஷயம் இது.
புலிகள் பிரச்சினை இல்லாத இந்த காலகட்டத்தில், சிங்களரை பிடித்துவந்து இந்திய தமிழ் மீணவர்களை விரட்டுங்கள் என சொல்வது யார்? சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவர்கள் வடக்கு கரை இலங்கை தமிழக மீணவர்கள்.
இப்பொழுது நடந்து கொண்டிருப்பது சாட்சாத் தமிழக மீணவர்கள் அதாவது இந்திய தமிழ் மீணவர் மற்றும் இலங்கை தமிழ் மீணவர் பிரச்சினை, உண்மையில் மோதிகொள்வது தமிழினம்.
அவர்களுக்கு சிங்கள அரசு, அதனால் ஓடி சென்று முறையிடுகின்றார்கள், சிங்களனுக்கு எதனையாவது காட்டி அரசியல் செய்யவேண்டும், அதுவும் இந்தியா அவர்களுக்கு எந்நாளும் எதிரி. வெளியில் நண்பன் என சொல்லிகொண்டே சீனாவிடம் விசாரிப்பார்கள், என்ன உங்கள் நீர்மூழ்கி கொஞ்ச நாளாக காணவில்லை.
அவர்கள் அப்படித்தான், நடிப்பில் கை தேர்ந்தவர்கள், பூகோள முக்கியத்துவம் அப்படி, அதனால்தான் அடிக்கடி இந்தியா,பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா என பல படபிடிப்பு நடக்கும்.
அப்படியான சிங்களம் என்ன சொல்லும், பார்த்தீர்களா இலங்கை தமிழ் மீணவர்களுக்காக இந்தியாவினையே எதிர்க்கின்றோம் என சொல்லி, வடக்கு பகுதியில் ஆதரவு திரட்டும், மக்களும் ஆதரவு கொடுக்கின்றனர், நடக்கின்றது.
தமிழனை சிங்களன் நடுகடலில் சுட்டுகொல்கின்றான் உறவுகளே என முழக்கமிடுபவர்களுக்கு, அங்க சுட சொல்வதும் தமிழன், சுடபடுவதும் தமிழனுக்காக என்பது தெரியாததல்ல, சொல்ல மாட்டார்கள்.
அப்படி சொன்னால் தொப்புள் கொடி, அகண்ட தமிழகம், என இவர்களால் முழங்க முடியாது, அதனால் மறைத்துகொண்டு மத்திய அரசு, தமிழக அரசு, சிங்களம் என வெறி ஏற்றுவார்கள்.
எதற்காக இப்படி மல்லு கட்டுவது? பிண்ணணியில் யார்? தமிழக மீடியாக்களை பார்த்து மன்மோகன், மோடி என புலம்பி திரியும் தமிழர்களுக்கு என்றாவது வட இலங்கை மீணவர்களின் துயரம் தெரியுமா?
ஈழ பிரச்சினை என்றால் மலையக மக்களை பற்றி பேசமாட்டோம், வடக்கு கிழக்கினை இணைப்பதில் ஈழ தமிழருக்கு என்ன பிரச்சினை என கேட்கமாட்டோம், தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கு ஈழத்தில் இடமில்லையா? ஏன் என கேட்கமாட்டோம்.
உள்ளூரில் ஒரு பிரச்சினையினை ஒழுங்காக தீர்த்திருந்தால்தானே அடுத்த ஊர் பிரச்சினை முழுமையாக தெரியும்?, நமக்கு தெரிந்ததெல்லாம் ஈழம், பிரபாகரன், புலிகள் மற்ற எல்லோரும் துரோகிகள், கடலில் மீன்பிடி பிரச்சினையா சிங்களன் ஒழிக, தமிழன் முதல்வரானால் எல்லாம் சரியாகும், வந்தேறி நாயக்கர் ஒழிக, வரப்பேறி பார்ப்பான் ஒழிக, எல்லோரும் ஒழிக……..
தமிழன் பிரதமரானால் கூட தீர்க்கமுடியா சிக்கல் இது என்றால் ஒப்புகொள்ளமாட்டோம்.
பிரச்சினையினை ஒரே கோணத்தில் பார்ப்பது தமிழக மீடியா, அதனை கட்சிகளும் ரசிக்கும், அது அரசியலானதும் பின் ஆர்ப்பரிப்பார்கள், இப்படியான ஒரு நிலை தமிழகத்திற்கு.
ராமேஸ்வரம் மீணவர்களின் கண்ணீரை போலவே வட இலங்கை மீணவர்களின் கண்ணீரும் கொடுமையானது, அதிலும் சில நியாயங்கள் உண்டு.
அவர்களை வைத்து அரசியல் செய்வது சிங்களம், ராமேஸ்வர மீணவர்களை வைத்து அரசியல் செய்வது தமிழக மீடியாக்கள்.
உண்மையில் கண்ணீர் விடுவதும், உயிரினை விடுவதும் ராமேஸ்வர மீணவர்கள்தான், அதே நேரம் வடக்கு இலங்கை மீணவர்களின் கண்ணீரிலும் சில நியாயங்கள் உண்டு
எப்படி? அது விசித்திரமானது, வெளி வராதது. தீர்வு உண்டா? நிச்சயம் உண்டு