ரியாலிட்டி ஷோ பெயரில் ‘கிராமத்தில் ஒரு நாள்’ என்றொரு நிகழ்ச்சி சன் டிவியில்
முன்பெல்லாம் சன் டிவிக்கு சில மரியாதை இருந்தது, இப்பொழுதெல்லாம் அது ஷகீலாவின் மலையாள படம் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது
ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் கிராமத்தில் ஒரு நாள் என்றொரு நிகழ்ச்சி, சன்டிவி நடிகைகள் சிலரை நீச்சலுடை கோலத்தில் நிறுத்தி சகதியில் புரளவிட்டார்கள்
நல்ல நிகழ்ச்சி செய்வதாக இருந்தால் அந்த தொழியில் தளை மிதிப்பது எப்படி? நாற்று நடுவது எப்படி? களை பறிப்பது எப்படி என காட்டியிருக்கலாம்
விவசாயத்தை எப்படி செய்வது என காட்டியிருக்கலாம்
ஆனால் இந்த பெண்களை உருளவிட்டு,புரள விட்டு ஷகிலா காட்சிகளையும் மிஞ்சுகின்றார்கள்.
இதில் பிண்ணணி இசை வேறு, ஏதோ அவர்கள் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் செய்வது போல பிண்ணணி கைதட்டல் வேறு
காண சகிக்கவில்லை, சின்னதிரையினை சென்சார் செய்யும் நேரம் வந்தேவிட்டது. தமிழக சின்னதிரைகளுக்கு முன்னோடியான சன்டிவி மலையாள பிட்டு படங்கள் அளவிற்கு தரமிழந்துவிட்டது காலத்தின் கோலம்
பாகம்பிரியாளோடு பார்த்ததால் இவ்வளவு கோபமாக எழுத முடிகின்றது,
ஆனால் தனியே பார்த்தால் கண்கொள்ளா காட்சிதான்
சேறு என்ன சேறு? அதுவா காட்சிக்கு முக்கியம்? கிராமம் என்றால் வயல்கள் மட்டும்தான் பச்சையாக இருக்க வேண்டுமா?
இதனால் சன்டிவி நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம்
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சன்னி லியோனை அழைத்திருந்தால் இன்னும் மவுசு கூடியிருக்கும்
அப்படியே தொகுப்பாளராக ஷகீலாவினையும், சுவேதா மேனனையும் அமர்த்துங்கள்
இந்நிகழ்வில் பங்குபெறும் பெண்களின் உடை பெரிதாக இருக்கின்றது, முத்துவேலர் காலத்திற்கு பின் சன்டிவி குடும்பம் கிராமம் செல்லாததால் உங்களுக்கு கிராமத்து உடை தெரிய வாய்ப்பில்லை
வயலில் வேலை செய்யும் பொழுது கோமணம் போலத்தான் உடுத்துவார்கள் என்பதால் ஆடை விவகாரத்தில் இன்னும் கவனம் அவசியம், இதெல்லாம் ரியாலிட்டிக்காக சொல்கின்றோம் வேறு ஒன்றுமல்ல
ஸ்பான்சராக சில காண்டம் கம்பெனி, வயக்கரா போன்ற கம்பெனிகளை தேர்ந்தெடுங்கள்
இந்நிகழ்ச்சியினை நள்ளிரவில் ஒளிபரப்பினால் கூடுதல் சவுகரியமாக இருக்கும்