ரொஹிங்கியா : நடப்பது என்ன?

ரொஹிங்கியா அகதிகள் மீது இந்தியா இரண்டாம் படுகொலைகளை நிகழ்த்துவதாக விகடன் பத்திரிகை சொல்லியுள்ளது, ஷோபா சக்தி என்பவர் எழுதியிருக்கின்றார்.

நடப்பது என்ன?

ரோஹிங்யா இஸ்லாமியர் உலகெல்லாம் தெரித்து ஓடுகின்றனர். பல நாடுகள் அகதிகளாக அடைக்கலம் கொடுக்கின்றன அதில் ஒன்று இந்தியா.

இப்பொழுது உள்ள உலக சூழலில் யார் அகதி? யார் தீவிரவாதி என்பதே பெரும் குழப்பம். அகதிகள் பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவது மகா எளிது.

ஈழ அகதிகளோடே புலிகளும் ஊடுருவியது ஒன்றும் ரகசியமல்ல‌

இன்று சிரிய அகதிகளை , லிபிய அகதிகளை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக நடத்த காரணமும் அப்படிபட்டதே. அவர்களில் சிலர் ஐஎஸ், அல்கய்தா அகதிகளாக இருக்க கூடும்.

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது கடமை, அந்த அகதிகளோடே சில களைகளும் வந்தால் களையவேண்டியதும் கடமை.

இத்தேசம் அதனைத்தான் செய்கின்றது, அகதிகள் எனபதற்காக திறந்து விட்டுவிட முடியாது. கடும் சோதனை அவசியம்

காரணம் வங்கம், பிலிப்பைன்ஸ் இன்னபிற கிழக்காசிய நாடுகளில் இஸ்லாமிய பங்கரவாதம் தலை தூக்கி நின்ற்கின்றது, இதில் போதை, ஆயுதம் கடத்தும் கும்பலும் உண்டு

இவர்கள் இந்தியாவில் புகுந்துவிடும் ஆபத்தும் உண்டு.

அதனால் தன் கடமையினை இத்தேசம் செய்கின்றது. அவர்கள் மேல் மத துவேஷமோ இல்லை வேறு எந்த வன்மமோ அறவே இல்லை.

அந்த இஸ்லாமிய மக்களும் இந்தியா மனிதாபிமானமிக்க, இஸ்லாமியருக்கு பாதுகாப்பான தேசம் என நினைத்தே வருகின்றார்கள். அது உண்மையும் கூட‌

ஆனால் இந்த விகடன் போன்ற பத்திரிகைகள் விஷம் விதைக்கின்றன‌

இன்னும் புலி, பிரபாகரன், திலீபன், சீமான் என அப்பத்திரிகை பிரிவினை வாதிகளை தூக்கிபிடிப்பது தெரிந்தது

இப்பொழுது மதரீதியான விஷங்களிலும் இறங்குகின்றது.

இது நிச்சயம் சரியல்ல, விகடன் கண்டிக்க படவேண்டிய பத்திரிகை என்பதற்கான காரணங்கள் கூடிகொண்டே செல்கின்றன.

அரசு செய்யவேண்டியதை செய்யட்டும்.