ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது வரும் சோதனைகள்
இந்த ரோமன் திருச்சபைக்கு அவ்வப்போது சோதனைகள் வரும், ரோமர்கள், யூதர்கள், இஸ்லாமியர், மார்ட்டின் லுத்தர், நெப்போலியன், விஞ்ஞானிகள் கம்யூனிஸ்டுகள் என அதற்கு சோதனைகள் காலம் காலமாய் வரும்
இப்பொழுது விஷயம் பேய் வடிவில் வந்திருக்கின்றது
பைபிளிலே இயேசு பேயினை விரட்டினார் என இருப்பதால் பேய் இருப்பதை அச்சபை நம்புகின்றது, இப்பொழுதெல்லாம் பேய் ஓட்ட தெரியாமல் பல பாதிரிகள் இருக்கின்றார்களாம், அவர்களுக்கான பயிற்சி நடைபெறும் என வாடிகன் அறிவித்தது
மிகாவேல் முதல் அந்தோணியார் வரை ஏகபட்ட புனிதர்களின் பெயரில் இன்றும் ஓட்டபடும் பேய்களை விரட்ட என்ன ஸ்பெஷல் பயிற்சியோ தெரியவில்லை
பேய் ஓட்ட என்ன பயிற்சி? இயேசு பெயரை சொன்னால் பேய் ஓடாதா என்றால் ஓடும். இயேசுவின் பெயரை ஒழுங்காக சொல்ல பயிற்சி போலிருக்கின்றது
இதில் பல கண்டனங்கள் வருகின்றன, பேய் இருப்பது இல்லை என்பது வேறுவிஷயம் , ஆனால் இந்த விஞ்ஞான காலத்தில் அப்படி செய்தால் நிரூபித்தாக வேண்டும்
ஏற்கனவே கலிலியோ முதல் பல விஞ்ஞானிகள் சொன்னது பொய் என அவர்களை பாடாய்படுத்திய திருச்சபை பின் அவை உண்மை என்றதும் ஹிஹிஹீஹ் என தலையினை சொரிந்து நின்றது
இப்பொழுதும் அப்படிபட்ட நிலை வேண்டாம் என பல கண்டனங்கள்
விஷயம் பற்றி எரிகின்றது, காரணம் உலகெல்லாம் ரோமன் சபை உண்டு எனினும் அந்நாட்டு சட்டங்கள் அதனை தடுக்கின்றன
பல நாடுகளில் இது ஏமாற்றுவேலை என தடுக்க சட்டமுண்டு. இந்தியாவில் கூட சில மாநிலங்களில் கண்கட்டு வித்தை தடுப்பு சட்டம் உண்டு
இங்கு ஆள்வது பாஜக வேறு, விடுவார்களா?
ஆளாளுக்கு இதுதான் வாய்ப்பு என குதித்துவிட்டார்கள், பாஜகவின் உடன்பிறவா சகோதரிகளான சங், சமிதி அமைப்புகள் “ஏய் போப்பே பேய் இருப்பதை நிரூபித்தால் உனக்கு பரிசு என தொடை தட்டுகின்றன..”
அவர்களுக்கென்ன அவர்கள் மதத்தில் எல்லாமே தெய்வம், சாத்தான் என்பதே கிடையாத மதம் அது
தமிழக பகுத்தறிவாளர்கள், வீரமணி கோஷ்டி எல்லாம் சைலன்ட். சங்கராச்சாரி இப்படி சொன்னால் குதிபார்களே தவிர வாடிகனுக்கெல்லாம் பதில் சொல்வதாக இல்லை
இப்பொழுது ஆளாளுக்கு வாடிகனுக்கு பேயினை காட்ட முடியுமா? என கடிதம் எழுதிகொண்டே இருக்கின்றார்கள்
இந்தியாவில் பேய்களுக்கா குறைவு? எல்லாம் அரசியல் முதல் பல தொழில்களில் மாறுவேடத்தில் சுற்றிகொண்டிருக்கின்றது
சாதிப்பேய் , மதப்பேய் என ஏராள பேய்கள் உண்டு
பெரியார் சிலை முதல், ராமர் பெயர் வரை சொல்லி இங்கு ஏகபட்ட பேய்களை நொடியில் கிளப்பமுடியும்
உண்மையில் வாடிகன் பேய் இருப்பதை நிரூபித்தால் என்னாகும்?
கத்தோலிக்க சபையே பாதியாகும் , ஏராளமான பேய்கள் பாதிரி எனும் பெயரில் அங்குதான் சுற்றிகொண்டிருக்கின்றன
பிரிவினை சபைகள் கேட்கவே வேண்டாம், பேய்களின் கூடாரமே அதுதான்
பேய்களை விரட்டுகின்றேன் என வாடிகன் கிளம்பினால் நிச்சயம் கிறிஸ்தவம்தான் காலியாகும்.
இதனால் போப்பாண்டவர் பலமுறை யோசித்துவிட்டு பேய் விரட்டுவது நல்லது.