ரோம் நகரில் குஷ்பூ
ரோம் நகரில் குஷ்பூ
அன்று எகிப்தின் கிளியோபாட்ராவினை கண்ட ரோம் , இன்று இந்தியாவின் கிளியோபாட்ராவினை கண்டிருக்கின்றது
முன்பு உலக பேரரசி விக்டோரியா, தான் உலகாளும் ராணியாயினும் கணவனுக்கு மனைவி என கட்டுபட்டு நின்றாள்,
அப்படி கோடான கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்றவராயினும் தன் மகள்களுக்கு தான் பாசமிகு அன்னை என்பதை சொல்லிகொண்டே இருக்கின்றார் குஷ்பூ
அழகின் அன்னை , அன்னையர் தினத்தினை கொண்டாடிய தருணம்..
நீ குஷ்பூ பற்றி எழுதுவதால் உன்னை அன்பிரண்ட் செய்கின்றோம் என சிலர் சொல்லிவிட்டு செல்கின்றார்கள்
நான் நல்ல விஷயங்களை எழுதுவதால் வந்தார்களாம், குஷ்பூ பதிவு பிடிக்காமல் செல்கின்றார்களாம்
ஏண்டா டேய்.. நீங்க நினைச்சமாதிரி எல்லாம் எழுத நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரனா?
என்னவோ நல்ல பதிவுக்கு 100 டாலர் அனுப்பி வைத்ததை போல, சிலர் சிலிர்த்துகொள்கின்றார்கள்
ஓசியில் படித்துவிட்டு அதற்கு கோபம் வேறு..என்னா வில்லத்தனம்.
யாரும் உங்களை இங்கு அழைக்கவுமில்லை, நீங்கள் சென்றால் தடுக்கபோவதுமில்லை
காரணம் உங்களுக்காக நான் எழுதியதுமில்லை, எழுதபோவதுமில்லை…
நான் ஒன்றும் சமூக காக்கும் போராளி அல்ல, அறிவு ஜீவி முகமூடி போட்டவனும் அல்ல, உலகத்தை மீட்க கிளம்பியவனும் அல்ல
ஏதோ ஒரு பதிவு குறித்து ஒரு பத்திரிகையில் கூட எழுத அழைத்தார்கள், பிரபல பத்திரிகை அது. என் உயரம் எனக்கு தெரியும் என்பதால் ஒதுங்கிவிட்டேன்
இன்னொன்று எழுதி ஒருவன் வாழ்வது என்பது தமிழகத்தில் நடக்காத விஷயம், தமிழக எழுத்தாளன் நிலை அப்படித்தான். ஆனான பட்ட சுஜாதாவே ஒன்றும் சம்பாதித்ததாக தெரியவில்லை
முகநூலில் எழுதி ஒரு புல்லையும் புடுங்கமுடியாது என்பது எனக்கும் தெரியும், ஆனாலும் தோன்றியதை எழுதுகின்றேன்..
நான் எழுத உங்கள் அனுமதி தேவையுமில்லை…
இவர்களுக்கு எல்லாம் மறுமை நாள் பற்றி கவலை இல்லை போலும், பின்னொரு காலத்தில் நான் மரித்து கடவுளின் விசாரணைக்கு செல்லும் பொழுது என்ன கேட்பார்?
“மானிடனே பூலோகத்தில் என் படைப்புகளை கண்டாயா? என் ஞானத்தை கண்டாயா?, எப்படி மகிழ்ந்திருந்தாய் சொல்” என்பார்
அதற்கு நான் கடவுளே பூலோகத்தில் நான் மிக நல்லவனாக இருந்தேன், அதனால் குடிக்கவில்லை, சினிமா பார்க்கவில்லை , பாகம்பிரியாள் தவிர எந்த பெண்ணையும் திரும்பி கூட பார்த்ததில்லை, உண்டு என் வீடு உண்டு வேலை உண்டு என்றிருந்தேன், என்னை பொறுத்தவரை நல்லவனாக வாழ்ந்தேன் என்றால் கடவுளுக்கு கோபம் வராதா?
“அற்ப மானிட பதரே இதற்காகவா உன்னை படைத்தேன், பூமியில் கொஞ்சமும் ரசனையின்றி வாழ்ந்த ஜென்மமா நீ, மானிட மகிழ்வே உனக்கு தெரியவில்லை
என் படைப்பின் உச்சமான குஷ்பூவினை உன் காலத்தில் படைத்திருக்கின்றேனே, அதனை கூடவா நீ ரசிக்கவில்ல்லை
நீ வாழ்ந்த வாழ்க்கை வீண், நான் கொடுத்த வாய்ப்பினை தவறவிட்டுவிட்டாய் போ நகரகத்திற்கு..” என்றால் என்னாகும்
அப்படி கடவுளுக்கு பயந்துதான் குஷ்பூவினை ரசிக்கின்றோம், போதுமா?