லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்

இலங்கையில் எத்தனை பந்துவீச்சாளர் வந்தாலும் அந்த அற்புதமான பவுலரை மறக்க முடியாது

அவர் சமிந்தா வாஸ்

மிக துல்லியமான பந்துவீச்சினை அவரிடம்தான் காணமுடியும். ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாத பந்துவீச்சு அது

அவர் கால்ராசிகாரரும் கூட, அவர் களமிறங்கிய பின்பே இலங்கை அணிக்கு யாரெல்லாமோ வந்தார்கள், அந்த அணி உலகின் மிகசிறந்த அணியாக இருந்தது

ஆட்டத்தின் தொடக்க ஓவரை வாஸ்தான் வீசுவார், அவர் அதிக உயரமுமல்ல ஆஜானபாகுவான தோற்றமும் அல்ல‌

ஆனால் பந்து சொன்னபடி செல்லும், வாசிம் அக்ரம் கூட அந்தமாதிரி வீசமுடியாது

லாராவோ டெண்டுல்கரோ அவரை மகா எச்சரிக்கையாகவே அணுகுவார்கள்

அவர் ஆடிய காலம் இலங்கை அணியின் பொற்காலம்

அவர் இடத்தை மலிங்கா முழுக்க இல்லாவிட்டாலும் ஓரளவு நிரப்பினார் இனி மலிங்காவுமில்லை

இன்னொரு சமிந்தா வாஸ் திரும்ப வராமல் இலங்கை அணி அதன் பொற்காலத்தை மீட்டெடுக்க முடியாது