லண்டனின் இலங்கை சுதந்திரநாள்…
என்னதான் சிங்கள அரசு தந்திரமாக நடந்தாலும் அதிகாரிகளில் சில அடிமுட்டாள்கள் உண்டு என்பது முன்பே தெரிந்த விஷயம். அப்படி ஒருவர் இப்பொழுது காட்சிக்கு வந்திருக்கின்றார்
அதாவது லண்டனின் இலங்கை சுதந்திரநாள் கொண்டாடபட்டது, இலங்கையின் லண்டன் தூதரகமும் சிறபித்தது
என்னதான் புலிகொடி பிடித்தாலும் ஐரோப்பிய ஈழதமிழர் இன்றுவரை இலங்கை குடிமக்களே, வைகோ ஈழம் சென்றது போல அல்லது புலிகள் தமிழகம் வந்தது போல அடையாளமின்றி செல்ல முடியாது. இலங்கை குடிமகன் என்ற அடையாளம் எக்காலமும் உண்டு
இதனால் சிங்களர் தமிழர் என பலரும் குவிந்திருந்தனர், தமிழர் வழக்கம் போல எதிர்ப்பு குரல் கொடுத்தனர், இன அழிப்பு, வதை முகாம், என குரல்கள் எழுந்தன
இலங்கை தூதர் அமைதியாக இருக்க அவருக்கு பாதுகாவலரான ஒருவருக்கு சனி விரலில் இருந்திருக்கின்றது, கூடியிருந்த கூட்டத்தை பார்த்து மூச் என சைகை காட்டி பின் கழுத்தை அறுத்துவிடுவதாகவும் சைகை செய்திருக்கின்றார்
விடுவார்களா? இதற்குத்தானே காத்திருந்தார்கள் . விஷயம் பெரிதாக வெடித்து சர்ச்சையாகின்றது. வைகோ அவசரமாக அந்த பாதுகாவலரே லண்டன் தூதர் என்பது போல “ஏ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே அந்த தூதரை வெளியேற்று..” என கத்த ஆரம்பித்துவிட்டார்.
விரட்ட வேண்டியது தூதரை அல்ல மாறாக இந்த பாதுகாவலரை
இவ்விஷயத்தில் அங்கிள் சைமன் வாய்திறக்கவில்லை , திறந்தால் லண்டனில் தமிழனின் கழுத்தை அறுக்கும்பொழுது கைது செய்யபட்ட சிங்களனை விட கூடாது என்ற ரீதியில் முழங்குவார், அவர் அப்படித்தான்
“எங்களை மிரட்டிவிட்டாயா இதோ பார் உன்னை பற்றி சொல்கின்றோம்” என அவரின் பெயர் பெர்னாண்டோ எனவும், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்த குற்றவாளி எனவும் ராஜபக்சேவின் படுகொலையினை மறைக்க இவருக்கு கொடுக்கபட்ட கூலிதான் இந்த பதவி எனவும் குண்டு வீசுகின்றார்கள்
விஷயம் சாதாரணம் அல்ல, மனிதர் இருப்பது லண்டனில், இதோ போர்குற்றவாளி பிடித்து விசாரியுங்கள் என ஈழத்தவர் கிளம்பிவிட்டால் மனிதர் கொஞ்சநாளைக்கு லண்டன் சிறையில் இருப்பது கட்டாயம்
மனிதர் பொதுநிகழ்வில் அதுவும் லண்டனிலே கழுத்தை அறுப்பேன் என மிரட்டியபின் இவருக்கு என்ன நிரூபணம் வேண்டும்?
இதனால் இலங்கை அரசு தவிக்கின்றது, இதுநாள் வரை தன் கொலைகார அடையாளத்தை மறைத்து இலங்கை தூதரின் பாதுகாவலர் என்ற மாறுவேடத்தில் லண்டனில் பதுங்கி இருந்தவரின் முகமூடி கிழிந்துவிட்டது
யார் கிழித்தார்? சாட்சாத் அவரே கிழித்தார். முட்டாள் தனமான காரியம் மூலம் மாட்டிகொண்டார்
அர்ஜென்டினாவில் இருந்து ஹிட்லர் கூட்டாளி ஐச்மென் பிடிபட்டு கொண்டுவரபட்டது போல மாபெரும் மனித படுகொலையாளி ஈழதமிழரிடம் அகபட்டான் என ஈழத்தவர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
விஷயம் பற்றி எரிகின்றது
இந்த விஷயம் சொல்வது ஒன்றுதான், எந்த தூதரகத்தையும் நம்ப முடியாது. பாகிஸ்தான் தீவிரவாதிகளே இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் மாறுவேடத்தில் இருக்கலாம் என்பது அது
அவர்கள் இப்படி சைகை செய்தால் தவிர எப்படி கண்டுபிடிப்பது?
சைகை செய்ய என்ன செய்யலாம்? ஆர்.எஸ்.எஸ்ஸின் சவுண்ட் பார்ட்டி யாரையாவது, H.ராசா போன்றவர்களையாவது பாகிஸ்தான் தூதரக விழாக்களுக்கு அனுப்பலாம்.
இவர்கள் பேசும் பேச்சில் சைகை என்ன? கத்தியோடே அகப்படமாட்டானா?