லைவி குஷ்பு திமுகவில் இருந்தார்

அப்பொழுது தலைவி குஷ்பு திமுகவில் இருந்தார்

திமுகவின் அடுத்தகட்ட தலைவர் யாரென சர்ச்சை வந்து மதுரை அலுவலகம் எல்லாம் எரிக்கபட்ட நேரமது

“திமுகவின் அடுத்த தலைவர் கட்சியின் உட்தேர்தல் படியே தேர்வு செய்யபடுவார் , இதுதான் கட்சியின் ஜனநாயகம், அதனால் அடுத்த தலைவர் யாரென இப்பொழுது சொல்லமுடியாது” என சொல்ல்விட்டார்

அதில் தவறொன்றும் இருக்க முடியாது, சாதாரண கருத்து , உண்மையான திமுக தொண்டன் அதைத்தான் சொல்வான், தலைவி அதைத்தான் சொல்லி இருந்தார்.

அதற்குள் அவர் வீட்டின் முன்னால் திமுகவினர் கூடினார்கள், கல்வீசினார்கள் இன்னும் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்

குஷ்பு சொன்ன கருத்துக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம், அத்தோடு “போங்கடா நீங்களும் உங்கள் கட்சியும் என் வெளியேறினா”ர் குஷ்பு

தன் சொந்த கட்சியின் பெண் சொன்ன கருத்துக்கு எதிராக தன் சொந்த கட்சியினர் செய்த அராஜகத்தை மனமார ரசித்தவர் முக ஸ்டாலின்

கட்சியில் ஒரு பெண்ணின் கருத்துக்கு சுதந்திரம் அவர் கொடுக்கவுமில்லை, அவரை தாக்கிய கட்சிக்காரரை கண்டிக்கவுமில்லை

அந்த முக ஸ்டாலின் இன்று சோபியாவின் கருத்து சுதந்திரத்திற்காக பொங்குகின்றாராம்

குஷ்பு கருத்து சொன்னால் அடிக்க்க வருவார்கள், ஆனால் சோபியா கருத்து சொன்னால் கருத்துரிமை வாழ்க என கிளம்புவார்கள்

திமுகவினருக்கு கொஞ்சமாவது மானமும் அறிவும் இருந்தால் தலைவி குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சோபியாவிற்கு குடை பிடிக்கட்டும்