ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை
“ஸ்டெர்லைட் தூத்துகுடி மக்களை கொன்றதோ இல்லையோ , அண்ணன சாய்ச்சுபுட்டுடா
என்ன செய்திருக்கணும் நம் இனமான பிள்ளைகள்?
பிளேடால கைய கீறிட்டு, தோட்டாவினை பிடிக்கும் பொழுது ஏற்பட்ட காயம், அண்ணன் புலிகள் கிட்ட பெற்ற பயிற்சினை இப்படி எங்களுக்கும் சொல்லி தந்தார் என சொல்லிவிட்டு கட்டோடு திரிய வேண்டாமா?
அதெல்ல்லாம் இல்லாம எப்படி தம்பி நம்ம கொள்கையினை எடுத்து செல்வது?
இனியாவது தோட்டாவினை பிடித்த காயம், தோட்டா உரசிய காயம் , துப்பாக்கி குண்டு மேல பல்டி அடித்தபொழுது வந்த காயம்னு கட்டுபோட்டு தமிழ் பிள்ளைகள் திரியணும். அதுதான் இன விடுதலைக்கு வழி”
லோக்சபா தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா : பொன்னார்
இது என்ன? மோடி கோலி சவாலை ஏற்று ஜிம்மில் தொங்கிகொண்டிருந்தால் இவர் திமுகவிற்கு சவால் விடுகின்றாராம்
திமுக கூட்டணி அமைத்து வெல்வது இருக்கட்டும், கூட்டணி அமைத்தும் ஒரு சீட் கூட வரமுடியா பாஜகவினை என்ன சொல்வது?
வெற்றிபெறும் சூழலில் இருப்பனுக்கு வியூகம் அவசியம், எப்படி பார்த்தாலும் தமிழகத்தில் 4 வோட்டு வாங்கமுடியாத பாஜக கட்சி தனியே நின்றால் என்ன ? தற்கொலை செய்தால்தான் என்ன?
இந்த தமிழக பாஜகவில் யாராவது ஒருவர் ஒருமாதிரி தினமும் பேசவேண்டும் என்பது கட்சி விதிபோலிருக்கின்றது
பன்னீர் செல்வத்துடன் ஜெயக்குமார், மா.பா பாண்டியராஜன் தூத்துகுடி பயணம்..
தூத்துகுடியில் காயம்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார் பன்னீர் செல்வம்
இவர்கள்தான் ஸ்டெர்லைட்டை மூட மாட்டோம் என அடம்பிடிப்பார்களாம், இவர்கள்தான் மக்களை சுட்டு விரட்ட சொல்வார்களாம்
ஆனால் ஆறுதல் சொல்லவும் வருவார்களாம், செத்தவர்களுக்கு பணமும் கொடுப்பார்களாம்
ஏதாவது புரியுமா என்றால் புரியாது, தலை சுற்றிவிடும்
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை
நேற்றுத்தான் பொன்னார் மத்திய அரசு பரிந்துரைத்தால் ஆலை மூடபடும் என சொல்லியிருந்தார்
ஆக இப்படி சொல்வது இருவருமே அமைச்சர்கள் என்பதுதான் விஷயம்
இப்படி இருவரும் குதர்க்கமாக சொல்ல என்ன மர்மம் இருக்கின்றது?
மாநில அரசு மூடினால் அதன் மேல் பழியினை போட்டு வேதாந்தாவிடம் தலை சொறியலாம் என்பது டெல்லி கணக்கு
டெல்லி மூடினால் வேதாந்தாவிடம் தங்கள் விசுவாசத்தை காட்டலாம் என்பது தமிழக அரசு கணக்கு
இப்படி தன் அடிமைகள் இரண்டும் ஏங்க நீங்க மூடுங்க என சொல்லிகொண்டிருப்பதை பார்த்து சிரித்துகொண்டிருக்கின்றது ஸ்டெர்லைட் தரப்பு