லோயாவின் மரணம் சொல்லும் விஷயம் ஒன்றுதான்…

நீதிபதி லோயா என்றொருவர் இருந்தார் அவர் ஒரு போலி என்கவுண்டர் வழக்கினை விசாரித்துவந்தார். அந்த வழக்கில் அமித்ஷாவிற்கும் சம்மன் அனுப்பபட்டது

வழக்கு நடந்தபொழுது மகாராஷ்டிரம் நாகபுரிக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லேயா அங்கே மாரடைப்பில் உயிரிழந்தார்

அதன் பின் நடந்ததுதான் சிக்கல், அவரின் உடல் மகா அவசரமாக சொந்த ஊருக்கு கொண்டு செல்லபட்டு தகணம் செய்யபட்டது. அதைவிட முக்கியமான விஷயம் அவருக்கு அதற்கு முன் இதயம் தொடர்பான நோய்கள் இருந்ததில்லை

மனிதர் அமித்ஷாவிற்கு சம்மன் அனுப்பியவர் என்ற வகையில் எதிர்கட்சிகள் போராட்டத்தை கையில் எடுத்துவிட்டன. மாரடைப்பில் யாரும் சாகலாம் இதில் சதி இல்லை மத்திய அரசும் சொல்லிகொண்டிருக்கின்றன‌

இல்லை இல்லை அவரின் தொலைபேசி தொடர்புகள் அழிக்கபட்டிருகின்றன, மகா அவசரமாக அவர் உடல் தகணம் செய்யபட்டிருக்கின்றது என எதிர்கட்சிகள் விடாபிடியாக நிற்கின்றன, சிபிஐ விசாரணை எல்லாம் கோரி நிற்கின்றன‌

முதலில் இவ்வளவு சிக்கலான வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு என்ன பாதுகாப்பு இருந்தது? யாரெல்லாம் நெருங்கினார்கள் என்பது பற்றி தகவல் இல்லை

அன்றே எதிர்கட்சிகள் கவலைபட்டிருந்தால் பாதுகாப்பினை பலபடுத்தியிருக்கலாம், இனி என்ன? அவர்களுக்கு அட்டகாசமான விஷயம் சிக்கிவிட்டது விடமாட்டார்கள்

பாஜக அரசு சிக்கலை எதிர்நோக்கி நிற்கின்றது, ஆனாலும் அசைந்து கொடுப்பதாக இல்லை

ஒரு நீதிபதி மர்மமாக செத்ததற்கு பொங்கும் தேசம், ஒரு மாநில முதல்வர் மர்மமாக செத்ததை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம், சும்மா இங்கே ஒப்புக்கு ஒரு கமிஷன் யாரையோ மிரட்ட அமைக்கபட்டிருக்கின்றது, இதனால் முடிவு வராது

எந்த கமிஷனின் முடிவு உருப்படியாக இந்நாட்டிற்கு கிடைத்தது?

ஒருவேளை அமித்ஷாவோ மோடியோ சந்தித்தபின் ஜெயா அப்பல்லோ சென்றிருந்தால் ஜெயாவிற்கு நீதி கிடைத்திருக்கலாம்

எப்படியோ இந்த லோயாவின் மரணம் சொல்லும் விஷயம் ஒன்றுதான், இனி சிக்கலான விஷயங்களில் தலையிடும் நீதிபதிகளை சுற்றி நடமாடும் காவல்துறை, கமாண்டோ படை, மருத்துவமனை என எல்லாம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்