வங்கிகளில் கடன்பெற தமிழக அரசு முயற்சி : செய்தி

போக்குவரத்து தொழிலாளர் சிக்கலை தீர்க்க வங்கிகளில் கடன்பெற தமிழக அரசு முயற்சி : செய்தி

இதில் ராமசந்திரனுக்கு விழாவாம், ஜெயாவிற்கு ஊரெல்லாம் சிலையாம், வெட்கமாக இல்லை?

ஏன் அந்த கொடநாடு எஸ்டேட்டையும், இன்னும் பல ஜெயா சொத்துக்களை விற்றால்தான் என்ன?

ஜெயா வீட்டில் கைபற்றபட்ட நகைகள் இன்னும் கன்னட கோர்ட்டில் உண்டு, அவற்றை மீட்டு விற்றால் என்ன?

இவர்கள் மேற்கொண்டு கடன் வாங்குவார்களாம், அதில் மக்கள் பணத்திலே வட்டியும் கட்டுவார்களாம்

ஏற்கனவே மாநில அரசு கடன் 4 லட்சம் கோடியாம், இன்னும் கடனாம். போகிற போக்கை பார்த்தால் விஜய் மல்லையா பக்கம் தமிழக அரசு அமரும் போல‌

இது எதில் முடியும்? அரசுக்கு இன்னும் பணம் வேண்டும் அதனால் அதற்கு தெரிந்த ஒரே வழி மதுவிற்பது

பாவம் தமிழன், அவன் இன்னும் அதிகமாக குடித்து அரசை காப்பாற்றவேண்டி இருக்கின்றது.