வங்கி மோசடி நீரவ் மோடி

Image may contain: 1 person, smiling, text

இந்தியாவில் அடிக்கடி வெளிவரும் ஊழலில் இப்பொழுது பஞ்சாப் நேஷனல் வங்கி சர்ச்சை வந்துள்ளது

என்னாயிற்று?

நீரவ் எனும் நகை வியாபாரி பல்லாயிரம் கோடிகளை வாங்கிவிட்டு கம்பி நீட்டி விட்டாராம், அவர் 2018ல் மோடியினை சந்தித்தார் என காங்கிரசாரும் இல்லை 2011லே ஊழல் நடந்தாயிற்று என பாஜகவினரும் சொல்ல தொடங்கியாயிற்று

ஆக காங்கிரஸ் காலத்தில் தொடங்கிய மோசடி , பாஜக காலம் வரை தொடர்ந்திருக்கின்றது என்பதுதான் விஷயம்

ஒன்று சொல்லலாம் இது வளரும் நாடு என்ற முறையில் பல தொழில்கள் தொடங்கபட வேண்டும் என்றமுறையில் அன்றே பணக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சாதகமான சட்டங்கள் இயற்றபட்டுள்ளன‌

இந்த மோசடிகளுக்கெல்லாம் அதுதான் காரணம், ஆளாளுக்கு சுருட்டிகொண்டு இப்பொழுதெல்லாம் வெளிநாட்டுக்கே ஓடிவிடுகின்றார்கள்

இதில் காங்கிரஸ், பாஜக என்ற வித்தியாசமெல்லாம் இல்லை, வாய்ப்பு கிடைத்த இடத்தில் தொழிலதிபர்கள் அடித்துவிடுகின்றார்கள், நிச்சயம் அவர்கள் அரசியல்வாதிகள் பாதுகாப்பின்றி வெளிநாட்டுக்கு பறக்க முடியாது

ஒரு கொலைவழக்கில் சிக்கினால் காவல் நிலையத்திலே பாஸ்போர்ட் முடக்கபடும் நாட்டில், பல்லாயிரம் மோசடி செய்தவன் தப்பி செல்வது எல்லாம் எப்படி?

இப்பொழுது ஒரே ஒரு கேள்வி வரும்

தொழிலதிபர் எவ்வளவு மோசடி செய்தாலும், வங்கிபணத்தை சூறையாடி சென்றாலும் எந்த ஊடகமும் எழுதுவதில்லை அந்த தொழிலதிபரின் உதவியாளர், அலுவகத்தார், அவரின் நண்பர்கள் யான யார் மேலும் எந்த நடவடிக்கையும் பாயவில்லை

ஆனால் திமுக மீது சிறு சர்ச்சை என்றாலும் மொத்த இந்தியவும் குதிக்கும், சர்ச்சை தொகை மொத்தமும் திமுக ஊழல் செய்தது என எழுதும், எல்லோரையும் பிடித்து உள்ளே வைப்பார்கள்

வழக்கு முடியுமட்டும் கற்பனைக்கு எட்டாத அளவு எழுதி குவிப்பார்கள்

வழக்கு முடிந்தவுடன் திமுக விடுதலை ஆகும், எல்லோரும அமைதி ஆவார்கள்

சர்காரியா கமிஷனில் இருந்து ஸ்பெக்ட்ரம் வரை இதுதான் நிலை. அங்கு ஒன்றுமே இருக்காது ஆனால் கற்பனை பூதம் கருணாநிதியினை கடலில் போடுங்கள் என்பது போல வரும்

ஆனால் பிரபல தொழிலதிபர்கள் பெரும் ஊழலை செய்வார்கள் , சில நாள் பேசபடும் பின் அப்படியே மறைக்கபடும்

ஏன் என்றால் அப்படித்தான், இங்கு பல கணக்குகள் புரிந்துகொள்ள முடியாதவை . அதுதான் இங்குள்ள அரசியல் தர்மம்.

வெளிநாடு தப்பி சென்ற தீவிரவாதிகளை தேடுவார்கள், அதில் சிலர் போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் அகபட்டு கொண்டும் வரபடுவார்கள், குறைந்தபட்சம் அவர்களுக்கு உயிர்பயமாவது இருக்கும்

ஆனால் இந்த தொழிலதிபர்கள் வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும் இந்தியா கண்டுகொள்ளாது

இந்த வங்கிகள் இப்படி தொழிலதிபர்களிடம் ஏமாறுவதை விட மக்கள் பக்கம் திரும்பலாம் கந்துவட்டி கொடுமை ஒழியும், இந்த அன்புசெழியன் போன்றோரின் அட்டகாசமும் ஓயும்

இந்த வடநாட்டு தொழிலதிபர்களின் கொடுமை எல்லாம் பார்க்கும்பொழுது எம்.ஆர் ராதா சொன்னது நினைவுக்கு வரும், அதுவும் நீரவ் என்பவரை பார்த்தவுடன் வருகின்றது

“தென்னாட்டவன் டிரஸ் பாத்தியா, ஒரு வேட்டி மேல சில நேரம் ஒரு நாரியல் இல்ல சட்டை அவ்வளவுதான்

வட நாட்டவன பார்த்தியா, சைடில பாக்கெட், கீழே ஒரு பைஜாமா பேன்ட் அதில இரண்டு பாக்கெட், மேலே சட்டைக்கு மேல ஒரு கோட்டு அதிலும் பாக்கெட்

எதுக்கு?

பூரா பயலும் திருட்டு பயலுக, கள்ள பணத்தை எல்லாம் அதுலதான் மறைச்சு வச்சு கொண்டு போவனுக”