வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர்
இந்த கன்னட தேர்தல் முடிவு அந்த நபரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டது, அவர் யார்? அவருக்கு இருந்த வலி என்ன? என்பதை இந்த தேர்தல் முடிவு மூலம் உலகிற்கு தெரிய வாய்ப்பு வந்துவிட்டது
அவர் பெயர் வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர்
இப்பொழுது அவர் கன்னட கவர்னர், ஆனால் முன்பு யார்? என்பதற்கு நாம் 22 வருடம் முன்னோக்கி செல்ல வேண்டும்
அது 1996ம் வருடம் அப்பொழுது திராவிட தமிழன் மூப்பனார் பிரதமராக விடாமல் திராவிட கன்னடர் தேவகவுடாவினை பிரதமராக தமிழக திராவிடர்கள் ஆக்கி வைத்திருந்த நேரம்
(அப்பொழுதும் உன்னை பிரதமராக்கினால் காவேரி விடுவீரா என தமிழக திராவிட சிங்கங்கள் கேட்கவில்லை என்பது வேறு விஷயம்)
அப்பொழுது குஜராத் பாஜக தலைவராக இருந்தவர் இந்த வஜுபாய் வாலா, அந்த தேர்தலில் குஜராத்தில் பாஜக ஓரளவு வென்றிருந்தது, மோடி எல்லாம் இந்த வாலாவிற்கு குனிந்து நின்ற நேரம் அது
121 உறுப்பினருடன் பாஜக அரியணை ஏறி இருந்தது, சுரேஷ் மேத்தா முதல்வராக இருந்தார், குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் தருணம் அது
தேவகவுடா அந்த ஆட்சியினை கலைத்தார், கட்சியினை எல்லாம் உடைத்தார் பல அட்டகாசங்கள் நடந்தன. தேவகவுடாவினை இயக்கியது காங்கிரஸ்
அப்பொழுது இந்த அநியாயத்திற்கு எப்படி உடன்பட்டீர்கள் என அன்றைய குஜராத் கவர்னர் பால்சிங்கிடம் கண்ணீர் விட்டவர் இந்த வஜுபாய் லாலா
அந்த வஜுபாயிடம் தான் இன்று தேவகவுடா தன் மகனுக்காக நிற்கின்றார்
விடுவாரா வஜுபாய்? நாட்டாமை படத்து பொன்னம்பலம் போல , “22 வருஷ்மாய் இந்த திருவிழாவிற்குதான் காத்துகொண்டிருந்தேன், வாங்க..” என தொடை தட்டி முழங்குகின்றார்
முற்பகல் செய்தால் பிற்பகல் விளையுமல்லவா?, தேவகவுடா குஜராத்தில் விதைத்தது இப்பொழுது கன்னடத்தில் விளைந்திருக்கின்றது
அன்றுபட்ட வலி வஜூலாவிற்கு மறக்குமா? தன் வடுக்களை தடவிக்கொண்டே சிரிக்கின்றார்.
தகப்பன் செய்யும் பாவம் பிள்ளையினை பாதிக்கும் என்பது குமாரசாமி விஷயத்தில் சரியாகின்றது.
கன்னடத்தில் ஆட்சி இழுக்கும் மர்மம் இதுதான், எடியூரப்பாவின் மாபெரும் நம்பிக்கையும் இதுதான்
காலம் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகின்றது?
இதனால் அறியபடும் நீதி என்னவென்றால் தமிழிசை போன்றோரை, எச்.ராசா போன்றோரை அற்பமாக எண்ண வேண்டாம்
பின்னொரு நாளில் அவர்களும் கவர்னராகி பெரும் அட்டகாசங்கள் செய்ய வாய்ப்பு இருக்கின்றது
ஏதோ ஒரு மாநிலம் பிற்காலத்தில் படாதபாடு படபோகின்றது.