வடகொரியாவிற்கு ஒரு நீதி, பாகிஸ்தானுக்கு ஒரு நீதியா?
சுதந்திர இந்தியா யுத்தம் பல கடந்து, சோதனை பல சந்தித்து வளர்ந்தது, வங்க போரில் வென்றது, 1974ல் இந்தியா அணுகுண்டு செய்தது, அதுமுதல் உலகநாடுகளின் பார்வை இந்தியாவின் மேல் இறுகின, பல வகை தொந்தரவுகளை கொடுத்துபார்த்தார்கள், இந்தியா அசைந்து கொடுக்கவில்லை,
இந்தியா பெரும் வளர்ச்சி பெறுவதை விரும்பாமல் உலகநாடுகள் பழிவாங்க எண்ணின, எப்படி பழிவாங்கினார்கள்?
பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதனை கண்டும் காணாமல் விட்டார்கள், அவர்கள் நினைத்திருந்தால் என்றோ பாகிஸ்தானை தடுத்திருக்கலாம், தடுப்பது என்ன? சதாமின் அணுகுண்டு, லிபியாவின் அணுகுண்டுகளை தடுத்தது போல தடுத்திருக்கலாம்
இன்று வடகொரியாவினை நெருக்குவது போல நெருக்கி பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வந்திருக்கலாம்
ஆனால் செய்யவில்லை ஏன்? அதுதான் உலக அரசியல். பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருந்தால் அது இந்தியாவிற்கான செக், தெரிந்தே அனுமதித்தார்கள்
பின் என்ன நடந்தது?
பாகிஸ்தானின் அணுவிஞ்ஞானி கான் என்பவரின் அணுகுண்டு விற்பனை உலக பிரசித்தம், ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம் வேண்டுமா? எனும் ரீதியில் அணுகுண்டு விற்றுகொண்டிருந்தார்,
லிபியா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளின் அணுகுண்டு ஆசைக்கு பிதாமகனே அவர்தான்
அந்த கானை என்ன செய்தார்கள்? ஒன்றும் செய்யவில்லை, இந்தியாவிற்காக அவரை நடமாட விட்ட பாவத்திற்காக இன்று வடகொரியா முன் கைபிசைந்து நிற்கின்றார்கள், தெய்வம் வடகொரிய வெள்ளை தக்காளி வடிவில் நிற்கின்றது
பாகிஸ்தான் அணுகுண்டு செய்யும் காலங்களிலே அதனையும், அந்த கானையும் தடுத்திருந்தால் நிலமை இவ்வளவு சிக்கலாகியிருக்காது, பின்லேடனை போல, கானையும் வளர்த்துவிட்டு தவிக்கின்றது அமெரிக்கா
இன்று வடகொரியா என்ன செய்துவிட்டது? யார் மீது போர் தொடுத்தது? அதனிடம் ஏவுகனைகளும் அணுகுண்டும் இருக்க கூடாது என்றால், உலகில் யாரிடமும் இருக்க கூடாது அல்லவா?
அது பொறுப்பற்ற நாடாம், அதனிடம் அபாய ஆயுதங்கள் இருந்தால் அண்டை நாடுகளான ஜப்பானும், தென்கொரியாவும் பாதிக்கபடுமாம்
இதோ பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கின்றது, அந்த திமிரில்தான் நேற்றுகூட காஷ்மீரில் புகுந்து தலைவெட்டுகின்றார்கள், அவர்களால் இந்திய பிராந்திய அமைதி கெடவில்லையா?
வடகொரியாவிற்கு ஒரு நீதி, பாகிஸ்தானுக்கு ஒரு நீதியா?
வடகொரியாவினை நொறுக்க துடிப்பவர்கள், பாகிஸ்தானை கொஞ்சுகின்றார்கள் அல்லவா? இதுதான் உலக அரசியல். இந்தியாவினை வளரவே விட கூடாது எனும் அரசியல்
இதனை எல்லாம் தாண்டித்தான் எம் தேசம் வளர்ந்து கொண்டிருக்கின்றது..
ஒரு நாள் பாகிஸ்தானுக்கு இருக்கின்றது, அன்று அடிக்கபோகும் அடியில் அத்தேசம் இருந்த இடம் தெரியாமல் போகும், மோகஞ்சதாரோ போல புதைந்தும் போகலாம்…