வடகொரியா மறுபடியும் முருங்கை மரம் ஏறுகின்றது

நன்றாக இறங்கி வந்த வடகொரியா மறுபடியும் முருங்கை மரம் ஏறுகின்றது

காரணம் யாரென்றால் சாட்சாத் அமெரிக்கா

இரு கொரியாக்களின் உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக இருந்தது, பொறுக்குமா அமெரிக்காவிற்கு?

என்றோ போட்ட அட்டவணைபடி இன்று அமெரிக்க தென்கொரிய கூட்டு ராணுவபயிற்சி நடந்தே தீரவேண்டுமாம், அது நடக்குமாம்

நீங்கள் இன்னும் யுத்த முஸ்தீபுகளில் இருக்க நான் மட்டும் ஆயுதங்களை கைவிட வேண்டுமா? என முறைத்துவிட்டு இன்றைய கூட்டத்தை ரத்து செய்கின்றது வடகொரியா

உலகில் எங்கும் அமைதி ஏற்பட்டுவிட்ட கூடாது என்பதில் அத்தேசத்திற்கு அவ்வளவு அக்கறை