வடமாநில இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது : மோடி

வடமாநில இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது : மோடி

கொஞ்சம் ஆழமாக ராணுவத்தில் மிகுதியாக பணியாற்றும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உபி போன்ற வடமாநிலங்களில் இளைஞர்களை பார்த்து நாடு பெருமைபடுகின்றது என சொல்லியிருக்கலாம்

வீட்டுகொருவர் எனும் அளவில் அவர்கள் ராணுவத்தில் இருக்கின்றார்கள், மிகுதியான உளவுபணியில் உயிரை கொடுத்துகொண்டிருப்பவர்கள் அவர்களே

உண்மையில் நாட்டு பாதுகாப்பு பணியில் மிகுதியாக பணியாற்றுவது அவர்களே.

மற்றபடி இந்த தமிழகத்தின் சில‌ கும்பல்கள் எல்லாம் தமிழகத்திற்கு இந்தியா என்ன செய்தது என கேட்பார்களே தவிர, இவர்கள் இந்தியாவிற்கு என்ன செய்தார்கள் என கேட்டால் ஓடிவிடுவார்கள்

இப்படி தெளிவாக சொல்லி இருக்கவேண்டிய மோடி பொத்தம் பொதுவாக வடமாநில இளைஞர்கள் என சொன்னதில் பாபர் மசூதி இடித்தவன் முதல் யோகிக்கு வாக்களித்த பசுமாட்டு காவல்காரன் வரை உள்ளே இழுத்துவிட்டதுதான் மகா சோகம்


காமராஜர் காலத்து சாதனைகளை எல்லாம் சொல்லாமல், ஏதோ தன் ஆட்சியில்தான் புதிய திட்டங்கள் வந்ததாகவும், புதிய அணைகள் கட்டபட்டதாகவும் பெரும் பிம்பம் காட்டுவார் கலைஞர்

அப்படி இந்திரா தொடங்கி வைத்த இந்திய விண்வெளி யுகத்தை, ராஜிவ் கொண்டுவர துடித்த கிரையோஜெனிக் நுட்பத்தை எல்லாம் மறைத்து ஏதோ தான் வந்தபின்புதான் இந்தியா விண்வெளிக்கு செல்லபோவதாக சொல்லிகொண்டிருக்கின்றார் மோடி

அரசியல் என்பது இதுதான்

ஆனால் இந்திய விண்வெளிதுறையில் இந்திரா காட்டிய அசுர பாய்ச்சல் மறக்கவே முடியாதது

மோடி நிச்சயம் சொல்லமாட்டார், நாம்தான் இந்திராவினை நினைத்துகொள்ள வேண்டும்