வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது

வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது இது எதில் முடியுமோ தெரியவில்லை, அவசர நடவடிக்கையில் அரசு இறங்கினால் நல்லது

அதாவது ஒரு இளைஞன் கொல்லபட்டிருக்கின்றான் அதுவும் எரித்து கொல்லபட்டிருக்கின்றான், மிக கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றான்

இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்த கொலை என ராமதாஸ் வரிந்து கட்டுகின்றார். விடுதலை சிறுத்தை கட்சியினர் தூண்டுதல் பேரில் அடாவடியில் ஈடுபட்டவர்களை அந்த இளைஞர் கண்டித்தார் அதனால் கொன்றிருக்கின்றார்கள், இதனை சும்மா விட போவதில்லை என சீறுகின்றார் ராமதாஸ்

அவருக்கு மிக அட்டகாசமான வேளை வந்து வேலை கிடைத்துவிட்டது

திருமாவளவனோ அவசரபட்டோ இல்லை தன் கட்சியினர் சொல்லிகொடுத்த தவறான தகவலில் சறுக்கிவிட்டார்

அந்த இளைஞர் கொல்லபடவில்லை மாறாக தன்னை தானே கொளுத்தி செத்தான் என திருமா அறிக்கைவிட்டிருக்கின்றார், போதாதா? கொல்வதையும் கொன்றுவிட்டு அவனே செத்தான் என்பதா? என பாமக கொதிக்கின்றது

நிலமை சிக்கலாகின்றது, வடமாவட்டங்கள் மீது மிக அவசிய நடவடிக்கை எடுப்பது நல்லது, அதற்காக அங்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தி நிலமையினை சரி செய்வோமா? என்ற அளவில் அமைச்சர்கள் யோசிக்காமல் இருக்க வேண்டும்

கொல்லபட்டவர் தலித் இல்லை என்பது மட்டும் புரிகின்றது, இதுவே தலித் கொல்லபட்டிருந்தால் மோடி ஆட்சி, உயர்சாதிவெறி என கிளம்பியிருப்பார்கள், யாரெல்லாமோ குதிப்பார்கள்,

இப்பொழுது கொலைகுற்றம் சாட்டபட்டோர் தலித் என்பதால் எல்லோரும் மகா அமைதி

விடுதலை சிறுத்தைகளும் பாமகாவினரும் ஒரு மாதிரி எதிர் எதிர் திரளும் நேரத்தில் தலித்துக்களின் புது காவலரான ரஞ்சித் என்பவரை காணவில்லை,

இதே தலித் கொல்லபட்டிருந்தால் போர்பரணி பாடி கிளம்பிருப்பார்.

அங்கிள் சைமன் எல்லாம் இதில் வரமாட்டார், “ஒரு தமிழ்பிள்ளை இன்னொரு தமிழ்பிள்ளையினை கொன்றிருக்கின்றது, இதனை குடும்ப சண்டையாகத்தான் பார்க்க வேண்டும், இதே கொலையினை
தெலுங்கன் சிங்களன் போன்ற அந்நியன் கொன்றிருந்தால் நான் விடமாட்டேன்” என சொல்லிவிடுவது அவர் பாணி.