வட்டி என்பது எங்கிருந்து தோன்றியது?

வட்டி என்பது எங்கிருந்து தோன்றியது?

அக்காலத்தில் ஆடுமாடுகள்தான் செல்வம், அதனை வைத்துதான் ஒருவன் மதிப்பிடபட்டான்

தானியம் பண்டமாற்றமும், ஆடுமாடுமே பிராதன தொழில். அப்படி சில விஷயங்களை கொடுத்து அதனை திரும்ப பெறும்பொழுது அவை பலுகியிருப்பதை பொறுத்து பங்கிட்டுகொள்வார்கள்.

அதாவது ஒரு ஆட்டை இன்னொருவனுக்கு கொடுத்தால் அது பெருகும், மாடு பெருகும், தானியங்களும் பெருகும்

இல்லாதோர் இப்படி இரவல் வாங்கி வளர்த்து அதில் உரிய பங்கை செலுத்தி தாங்களும் வாழ்ந்தனர்

இதில்தான் முதலாளிகளுக்கு விபரீத எண்ணம் வந்தது

ஆடும், மாடும் , தானியமும் கொடுத்தால் பெருகுகின்றது. பணம் கொடுத்தால் மட்டும் பெருகாதா? என எண்ணி சில வியூக திட்டங்களை வகுத்தனர், அப்படி வந்ததுதான் வட்டி முறை

மத்திய ஆசியாவில் தோன்றிய அவ்விஷயம் பின் யூதரிடம் கொடிகட்டி பறந்தது. அவர்கள் ஐரோப்பா எங்கும் ஓட அங்கு அது பிராதன தொழிலானது

யூதர்களுக்கு எதிராகவே மதம் கண்ட இஸ்லாம் அதனை வெறுத்தது

ஆனால் ஐரோப்பா அதனை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை, அக்கால ஐரோப்பியர்கள் நதியின் கரையில் (bank) அமர்ந்துகொண்டு வயலில் வேலை செய்பவர்களிடம் வசூலிப்பார்களாம்

இதனால் வங்கிகள் இன்றும் bank என்றே ஆனது என்கின்றார்கள் ,

இத்தொழிலில் கரை கண்டது யூத இனம். அதற்கு இது ஒரு தொழில், இதுபற்றிய குறிப்புகள் பைபிளிலே உண்டு

ஹிட்லர் யூதர்களை கொல்ல தேடியதற்கு அவர்களின் வட்டிமுறையும் ஒரு காரணம், பின் ஹிட்லரிடமே கந்து வட்டி கேட்டால் விடுவாரா?

இதில் செட்டியார்கள் எப்படி இத்தொழிலுக்கு வந்தனர்?

உலகில் அன்றே எல்லோருக்கும் எல்லா இனத்தாருடன் தொடர்பு இருந்திருக்கின்றது, செட்டியார்களின் வியாபாரம் சிலப்பதிகார காலத்திலே பிரசித்தி பெற்றது

அப்படி உலகெல்ல்லாம் ஓடிய செட்டியார்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே , அலெக்ஸாண்டர் காலத்திலே அதனை தமிழகத்திலும் செய்தார்கள்.

எல்லா வங்கிகளும் தமிழகத்தில் செட்டியார் வங்கிகளாகவே இருந்தன‌

தமிழக வட்டிமுறைகளில் செட்டியார்களின் பங்கு மிக அதிகம். ஆனால் நியாமான வட்டி அது.

பர்மாவினை பிடித்த வெள்ளையன் சொன்னான், பர்மா இந்த அளவு செழிப்பாக (அக்காலத்தில்) இருப்பதற்கு செட்டியார்களே காரணம்

பின் பணம் இருப்பவன் எல்லாம் அந்த தொழிலை நடத்தினான், அது இன்று கந்துவட்டி , மீட்டர் வட்டி என கொடுங்கோலம் ஆகிவிட்டது

இதில் இப்பொழுது அங்கிளின் மங்கிகள் வருகின்றன, எப்படி?

செட்டியார்கள் வட்டிமுறைக்கு காரணம், அதுவும் தெலுங்கு செட்டியார்கள் மகா மோசம், அவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்ற அளவிற்கு சீறுகின்றார்கள்

எங்காவது தொடங்கி தெலுங்கு மக்களிடம் சென்று வம்பிழுப்பது இவர்கள் வேலை

தெலுங்கு செட்டியார்கள் வேறு இனமாம், அவர்களை எலலம் விரட்ட வேண்டுமாம்

செட்டிகளின் பூர்வீகம் கடல்கொண்ட பூம்புகார், வியாபார நிமித்தமாக அன்றே உலகெல்லாம் சென்ற இனமது, சில இடங்களில் தங்கிவிட்டது

மலேசியாவின் மலாக்கா செட்டி அப்படிபட்டது, சிங்கப்பூரில் செட்டியார்கள் வியாபார அரசாங்கமே முன்பு உண்டு.

(செட்டியார்களிடமிருந்தே சீன இனம் வட்டிமுறையினை கற்றது, இன்று கிழக்காசியாவின் பெரும் வட்டி முதலைகள் சீனர்களே)

இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனே அந்த செட்டி வம்சம்

இப்படி உலகெல்லாம் பரவிய செட்டிகள் இந்தியாவிலும் பரவினர், கங்கை கரை வரை செட்டியார்கள் கட்டிகொடுத்த சத்திரம் அன்றே இருந்தது

அப்படி இந்தியாவின் பல மாநிலங்களில் பரவிய செட்டியார்கள், அங்குள்ள மக்களாயினர்

இன்றிருக்கும் பிரதமர் மோடி கூட செக்கானி செட்டி எனும் வம்சம் என்றுதான் சொல்கின்றார்கள்.

இப்படி செட்டியார்களின் பூர்வீகமும் அவர்கள் பரவிய விதமும் அவர்கள் உலகெல்லாம் பதித்திருக்கும் பெரும் அடையாளமும் தெரியாத அங்கிளின் மங்கிகள் தெலுங்கு செட்டியார்கள்தான் வட்டிமுறையினை கொண்டு வந்தது போல் குதிக்கின்றன‌

ஒரு மண்ணும் தெரியாது, ஒரு வரலாறும் தெரியாது, மாறாக யாராவது வட்டிகொடுமையில் செத்தால் அதற்கு காரணம் செட்டி, அதுவும் தெலுங்கு செட்டி, இரக்கமே இல்லாத செட்டி என கிளம்பிவிட வேண்டியது பிளட்டிஸ்

ஏ மங்கிகளே

இனியாவது வாசிக்க ஆரம்பியுங்கள், சும்மா எதற்கெடுத்தாலும் தெலுங்கன், நாயக்கன், செட்டி, இலுமினாட்டி என கிளம்பாதீர்கள் கம்முனாட்டிஸ்.

உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் சூடு, சொரணை எல்லாம் உங்கள் தலைவனை போல இல்லவே இல்லை.

நீங்கள் எல்லாம் ஏன் டெங்கியில் சாகவில்லை?