வட இலங்கை தமிழர்கள் இலங்கை அமைச்சரிடம் மனு

இந்த வட இலங்கை தமிழர்கள் குறிப்பாக மீணவர்கள் இலங்கை அமைச்சரிடம் ஒரு மனுவினை கொடுத்திருக்கின்றார்கள்

என்ன மனு?

“இந்திய மீணவர்களான இந்திய தமிழ் மீணவர்கள் நம் பகுதியில் வந்து இன்னமும் மீன்பிடித்து எம் தொழிலை கெடுக்கின்றார்கள், இந்த படகை பிடித்து வைத்தல், சிறை வைத்தல் எல்லாம் போதாது , இன்னும் கடுமையாக நடவடிக்கை வேண்டும்..” என கடுமையான வார்த்தைகளை சொல்லி இருக்கின்றார்கள்

இலங்கை அமைச்சரான அந்த சிங்கள விஜயமுனி என்பவர் பொறுப்பான பதிலை சொல்லியிருக்கின்றார்

இந்தியா நமக்கு நிறைய உதவிகளை செய்கின்றது, துறைமுகங்களை எல்லாம் கட்டி தருகின்றது

ஏன்? உங்கள் இந்துமதமும் எங்கள் புனிதமான புத்தமதமும் அங்கிருந்துதான் இலங்கைக்கு வந்தது, அவர்களை எப்படி பகைக்க முடியும்?

கவனியுங்கள், இந்திய மீணவர்களை பிடித்து உதையுங்கள் என மனுகொடுக்க போனது தொப்புள் கொடி உறவுகள்

ஆனால் இந்தியா நட்புநாடு அவர்களை பகைக்கமாட்டோம் என சொல்பவன் சிங்களன்

புரிய முடிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள்