வட கொரியா …..
கிழக்கே முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் நாடு கொரியா, எப்படியோ இந்தியா பாகிஸ்தான் போல இரண்டாகி, ஒன்று அமெரிக்க புட்டிபாலில் புஷ்டியாயிற்று
இன்னொன்று கம்யூனிசம் பேசி பின் குடும்ப ஆட்சியில் சிக்கியது, அதன் முதல் தலைவர் பெருந்தலைவர் என அழைக்கபட்டார், அவரின் மகன் அன்பு தலைவர், இப்பொழுதிருக்கும் அதிபர் மக்கட் தலைவர் என அழைக்கபடுகின்றார்
அழைக்கபடுகின்றார் என்றால், அப்படித்தான் சசிகலா சின்னம்மா ஆன கதைதான்
இப்போதுள்ள மக்கள் தலைவருக்கு உலகெல்லாம் எதிர்ப்பு, அணுகுண்டு, ராக்கெட் என யாரையாவது மிரட்டிகொண்டே இருப்பது, சுருக்கமாக சொன்னால் நமக்கு பாகிஸ்தான் எப்படியோ அப்படி தென்கொரியாவிற்கு வடகொரியா
வடகொரிய அதிபரின் சாதனை நிரம்ப உள்ளது, நாட்டை நாசமாக்கி வைத்திருப்பது, பொருளாதார தடைகளை அகற்ற முயற்சிக்காதது, எல்லாவற்றிற்கும் மேல் எப்பொழுதும் போதையிலே இருப்பது, அப்போதையிலே கொலை செய்வது, ராக்கெட் விடுவது என பெரும் அழிச்சாட்டியம்
அம்மக்களோ அதிமுகவினர் போல மக்கள் தலைவர் வாழ்க என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், சொல்லி ஆக வேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான்
பல இடங்களில் எதிர்ப்பு வலுக்க, அதிபர் வேறுவகையில் சிந்தித்திருக்கின்றார், அதாகபட்டது கலைஞர் குடும்பம் தான் திமுகவினை ஆளும், சசிகலா குடும்பம் அதிமுகவினை ஆளும்,
நேரு குடும்பம் காங்கிரசை ஆளும் அப்படி தன் தாத்தா பெருந்தலைவர் கிம் யிங் ஸோலின் குடும்பதான் நிச்சயம் வடகொரியாவினை ஆளும்
ஆனால் தனக்கு போட்டியாக இன்னொருவன் குடும்பத்தில் இருந்து வந்துவிட்டால்?
அப்படி ஒருவர் உண்டு, அதாவது அன்புதலைவர் (இவரின் தந்தை) இன்னொரு பெண் மீதும் அன்பாயிருந்து ஒருவனை பெற்றுவிட்டார், அவரோ கலைஞரின் மகன் முக தமிழரசு போல அரசியல் வேண்டாம் என சொல்லிவிட்டு சீனாவின் மக்காவ் தீவில் வாழ சென்றுவிட்டார்
அவர்தான் போனாரே ஒழிய, வட கொரிய அதிபர் குடும்பத்தில் அவர் பெரும் கவலை ஆனார். சொல்லமுடியாது வல்லரசுகள் இதோ உங்கள் பெரும் தலைவரின் பேரன், இவரே அதிபர் என சொல்லி மக்களை திரட்டினால் என்ன ஆகும்?
அட நமக்கு பெருந்தலைவர் குடும்பம்தானே வேண்டும், இந்த பேரன் இருந்தால் என்ன? அந்த பேரன் இருந்தால் என்ன? என மக்கள் சிந்தித்துவிட்டால்?
இப்படிபட்ட கவலையில் இருந்திருக்கின்றார் அந்த வடகொரிய அதிபர்..
எங்கோ சென்றுவிட்டு அந்த இன்னொருவர் மலேசியா வழியாக மக்காவ்விற்கு (மக்கா அல்ல மெக்காவ்) செல்லும்பொழுது தீர்த்துவிட்டார்கள்
எப்படி?
மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்கள் அவர் மீது ஸ்பிரே அடித்திருக்கின்றார்கள், அவர் இறந்துவிட்டார்
அந்த வியட்நாமிய பெண்களை விசாரித்தால், இது டிவி ஷோவிற்கான நிகழ்ச்சி , உங்களுக்கு 5000 ரூபாய் ( ஆம் அவ்வளவுதான்) நீங்கள் தெளியுங்கள், நாங்கள் மறைந்திருந்து ஷூட் செய்வோம், பின் சிரித்துகொண்டே வருவொம் என யாரோ சொன்னதாக அப்பெண்கள் சொல்கின்றார்கள்
வடகொரியா அந்த கிம் ஜாங் நம்மின் பிணத்தை ஒப்படையுங்கள் என மிரட்டுகின்றது, மலேசியா அசைந்துகொடுக்கவில்லை, வாரிசு வரட்டும், மரபணு உறுதியாகட்டும் என பதில் சொல்லிவிட்டு விசாரிக்கின்றது
மலேசியாவிற்கான வடகொரிய தூதரே சிக்கும் நிலை
விசாரணை வடகொரிய அதிபரை நோக்கி செல்வது போல தெரிகின்றது
அவரோ பிணத்தை மட்டும் கொடு என மிரட்டிகொண்டிருக்கின்றார்
கொல்லபட்ட கிம் ஜாங் நாமின் வாழ்வு சொல்வது இதுதான், அதிகாரத்திற்கான வாரிசு போட்டியில் ஒதுங்கி இருக்கும் அப்பாவியும் கொல்லபடுவான், இது அதிகார வெறியாட்டத்தின் ஒரு அங்கம், அதிகாரவெறி அப்படியானது
அந்த குடும்பத்தில் பிறந்ததற்காக அவர் இறந்திருக்கின்றார்
எங்கோ ஏழை குடும்பத்தில் பிறந்ததற்காக 5 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு இரு பெண்கள் கொலைகாரியாகியிருக்கின்றார்கள்
இவர்களை பயன்படுத்தி காரியம் சாதித்த உளவுதுறை தப்பி இருக்கின்றது.
சும்மா சொல்லகூடாது மிக நுட்பமாக திட்டமிட்டு, இறுதிவரை பின் தொடர்ந்து இறுதி நிமிடம் வரை சளைக்காமல் திட்டமிட்டு போட்டிருக்கின்றார்கள்.
இந்த வாய்ப்பினை விட கூடாது என பல நாட்டு உளவுதுறைகளும் களத்தில் இருக்கின்றன
இது சர்வதேச உளவுதுறைகளுக்கு இடையிலான விளையாட்டு, அதி தீவிரமாக நடக்கின்றது.
தமிழக அரசுக்கும் ஒரு உளவுதுறை உண்டு, அது என்ன செய்கின்றது தெரியுமா?
பழனிச்சாமிக்கு ஆதரவு என்ன? சசிகலாவினை பற்றி மக்கள் என்ன பேசுகின்றார்கள்? தீபாவிற்கு செலவழிப்பது யார்?
பன்னீர் செல்வத்தின் அரசியல் எடுபடுமா?
இப்படி பெரும் அதிமுக்கிய விசாரணையில் ஈடுபட்டுள்ளது தமிழக உளவுதுறை…