வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன்

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன்

வதந்தியால் இன்றுமட்டுமா ஆபத்தா?

ஐயகோ வடக்கு வளர்கின்றது, தெற்கு தேய்கின்றது, தமிழனுக்கு மாபெரும் அழிவு வருகின்றது. தமிழகம் அழிய போகின்றது என பெரும் வதந்தியினை பரப்பிவிட்டு ஆட்சியினையே கைபற்றியவர்கள் உள்ள‌ தமிழகம் இது

பிராமண, வருணாசிரம வதந்திகள் அடிக்கடி வரும்

அதன் பின் ஈழத்தை காக்க போகின்றோம் இன்னும் யாரை எல்லாமோ காக்க போகின்றோம், காவேரி மீட்க போகின்றோம் என நிறைய வதந்திகள் வரும்

ராமசந்திரன் புரட்சி தலைவன், ஜெயலலிதா புரட்சி தலைவி, சசிகலா தியாக தலைவி என்பதை விடவா பெரும் வதந்தி பரவிற்று?

டெல்லியினை பெரும் எதிரியாக்கும் வதந்தி , கட்சிகள் ஓவ்வொன்றும் கிளப்பிவிடும் வதந்தி என ஏகபட்ட வதந்திகளை பார்த்த தமிழகம் இது

அப்படிபட்ட தமிழகத்தில் இப்பொழுது வதந்தி பரவுவதா அதிசயம்?

இதோ கமலஹாசன் கூட தமிழகத்தை தன் மையத்து மூலம் காக்க போவதாக வதந்தி பரப்புகின்றார்

வதந்தி பரப்புவர்களை கைது செய்ய வேண்டும் என்றால் எல்லா அரசியல்வாதிகளையும் கைது செய்ய வேண்டும், கமலஹாசனும் அதில் நிச்சயம் வருவார்