வம்பை இழுதிருக்கின்றார் டிர‌ம்பானவர்

இம்ரான் கான் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் வம்பை இழுதிருக்கின்றார் டிர‌ம்பானவர்.

அவர் வம்பானவர் என்பது உலகிற்கே தெரியும் என்றாலும் இம்முறை மோடியினை இழுத்துவிட்டு வம்பிழுத்திருகின்றார்.

அதாவது காஷ்மீர் விவகாரத்தில் தன்னை பஞ்சாயத்து செய்ய தன்னை மோடி அழைத்ததாக சொல்லிவிட்டார்

இது பற்றி எரிகின்றது, இந்திய நிலைப்பாடு என்பது காஷ்மீரில் மூன்றாம் தலையீடு என்பது கூடவே கூடாது என்பது

மோடி அரசும் அதே நிலைப்பாடே

ஆனால் டிரம்ப் இப்படி சொன்னதும், இந்தியா தன் மறுப்பினை இப்படி சொல்கின்றது

“நாங்கள் அவரை மத்தியஸ்தம் செய்ய அழைக்கவில்லை, ஆனால் நீங்கள் அழைத்தால் மத்தியஸ்தம் செய்ய தயார் என டிம்ப்தான் சொன்னார், நாங்கள் அவரை அழைக்கவில்லை அழைக்கும் திட்டமுமில்லை” என சொல்லிவிட்டது

இதுபற்றி டிரம்ப் என்பவர் இன்னும் பதில் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார் போல தெரிகின்றது.