வரலாற்றிலே புதிது
நாம் கணித்ததுதான் நடந்தது
நெல்லை தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்துவதில் திமுக பலத்த யோசனைக்கு தள்ளபட்டிருக்கின்றது, உத்தேச வேட்பாளர் என இருவர் பெயரை வெளியிட்டிருக்கின்றார்கள்
இது அரசியல் வரலாற்றிலே புதிது
அதாவது நெல்லை திமுகவில் நாடார் வோட்டு மட்டும் வெல்லாது, ஆனானபட்ட சரத்குமாரே புகழின் உச்சியில் நின்றபொழுது தொகுதி அது
அப்படிபட்ட திமுகவில் ஏகபட்ட கோஷ்டிகள் உண்டு, ஆவுடையப்பன், அப்பாவு இன்னும் ஏக கோஷ்டிகள், இது போக அவ்வப்போது வந்து செல்லும் கருப்பசாமி பாண்டியன் என பல
இதில் இந்த ஞானதிரவியம் என்பவரும் கிரகாம் பெல் என்பவரும் ராதாபுரம் தொகுதியில் செங்கோல் செலுத்துபவர்கள், அதாவது திமுகவின் தூண்கள்
அப்பாவு என்பவர் இன்னொரு கோஷ்டி
தமாகாவில் இருந்து வந்தாலும் அப்பாவு வித்தியாசமானவர், 60 ஆண்டுகால திமுக வரலாற்றிலே கலைஞரின் தந்தை முத்துவேலருக்கு ராதாபுரத்தில் சிலை வைத்தவர் அவர்
ஆம் கலைஞர் வீட்டில் கூட அஞ்சுகம் அம்மாள் சிலைதான் இருக்கும், அந்த முத்துவேலர் படம் தேடினாலும் கிடைக்காது ஆனால் அவருக்கு சிலைவைத்த ஒரே நபர் அப்பாவு
இப்பொழுது இவர்களுக்குள்தான் போட்டி, கடைசியில் கிரகாம் பெல் என்பவருக்கு அல்லது ஞானதிரவியம் மகனுக்கு என செக் வைத்து இன்னும் தீர்ப்பு சொல்லாமல் இருக்கின்றது தலமை
ஆக அப்பாவு கோஷ்டி, ஆவுடையப்பன் கோஷ்டி எல்லாம் கனத்த அமைதி
இவர்கள் இப்படி யோசிக்க தினகரன் தரப்பும் ஞானவேல் என்பவரை களத்தில் இறக்கிவிட்டிருகின்றது
முன்பு மைக்கேல் ராயப்பன் என்றொருவர் இருந்தார் அல்லவா? தெரியவில்லை என்றால் விஜயகாந்திடம் கேளுங்கள் சொல்வார்
ஆம் அந்த மைக்கேல் ராயப்பன் போல தொழிலதிபர் இந்த ஞானவேல், இவரும் ராதாபுரம் ஏரியாவே
மிக சரியாக திமுகவுக்கு செக் வைக்கும் விதமாக வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றார் தினகரன்
இல்லையேல் தென் நெல்லையின் பெரும் வாக்குகள் திமுக பக்கம் செல்லும், அதை கச்சிதமாக முறியடிக்க வழி செய்திருக்கின்றார் தினகரன்
தூத்துகுடி தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதி செய்யபட்ட நிலையில் நெல்லையில் வேட்பாளர் யார் என அறிவிப்பதிலே கனத்த குழப்பத்தில் இருக்கின்றது திமுக தலமை
உண்மையில் அத்தொகுதியினை காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்கலாம், அவர்களுக்கு திமுகவினை விட வாக்கு வங்கி அதிகம் எளிதாக வென்றிருக்கலாம்
ஆனால் பல கணக்குகளுக்காக அத்தொகுதியினை கையில் எடுத்த திமுக சிக்கியிருகின்றது
திமுகவுக்கு தென் நெல்லைபக்கம்தான் வாக்கு, அங்கு சரியான நபரை நிறுத்தி பிரித்தால் விஷயம் எளிதாகும்
இந்த நுட்பத்தில் இப்போதைக்கு மிக சரியான பாதையில் செல்கின்றது தினகரன் கோஷ்டி