வரலாற்றில் அமெரிக்கா பாடம் படிக்கவே இல்லை

Image may contain: 1 person

முன்பு சதாம் குவைத்தை பிடித்தார், சவுதிக்கு வரும் எண்ணமெல்லாம் அவருக்கு இல்லை. பல சர்ச்சைகளில் பதிலடி கொடுக்க குறிப்பாக எண்ணெய் உற்பத்தியினை குறைக்க மறுத்ததால் குவைத்தினை அவர் ஆக்கிரமித்தார்

திபெத்தை சீனா ஆக்கிரமித்தால் அமெரிக்கா கண்டுகொள்ளுமா என்றால் இல்லை, காரணம் திபெத்தில் எண்ணெய் இல்லை

ஆனால் குவைத்திற்காக வந்தது, எப்படி வந்தது? அடுத்தது சதாம் விழுங்கபோவது உன்னைத்தான் என சவுதி அரசை பயமுறுத்தி கால்பதித்தது, வளைகுடா யுத்த முடிந்து கிட்டதட்ட30 வருடம் ஆக போகின்றது, சதாம் இல்லை, குவைத்தை மீட்டாயிற்று ஆனால் அமெரிக்க ராணுவம் இன்னும் சவுதியில் உண்டு

இப்பொழுது சிரியாவிலும் நிறுத்த ஆயத்தமாயிற்று, அவர்கள் சென்றுவிட்டால் ஐ.எஸ் இயக்கம் வருமாம் இதனால் 30 ஆயிரம் அமெரிக்க துருப்புக்கள் வட சிரியாவில் இருக்குமாம்

இது அண்டை நாடானா துருக்கிக்கும் இன்னும் பல நாடுகளுக்கும் கடும் சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றது

முன்பு இப்படி லெபனானில் இருந்தது அமெரிக்கா, ஹெஸ்புல்லா இயக்கத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஓடியது, இப்பொழுது சிரியாவிற்கு வந்தாயிற்று

சிரியாவில் அமெரிக்க முகாம் அமையும் இத்தருணத்தில்தான் ரஷ்ய குண்டுவீச்சில் பலர் பலியானதாகவும், குழந்தைகள் கொல்லபடுவதாகவும் அமெரிக்கா செய்தி பரப்பி வருகின்றது

அமெரிக்க உளவுதுறையும் , உலகெல்லாம் உள்ள அமெரிக்க தூதரமும் அதனை செவ்வனே செய்கின்றன‌

முகநூல் முழுக்க சேவ் ரஷ்யா என பொங்குவதும், ரஷ்யா சிரியாவினை விட்டு வெளியேறு என பலர் வரிந்துகட்டுவதும் இதனால்தான்

ஆனால் அமெரிக்க படை மட்டும் நிற்கலாமாம்

ஆனால் வரலாற்றில் அமெரிக்கா பாடம் படிக்கவே இல்லை என்பது புரிகின்றது

இப்படித்தான் முன்பு ஆப்கனில் ரஷ்யபடை நின்றபொழுது உலக இஸ்லாமியரே வாருங்கள் என அழைத்து ரஷ்யாவிற்கு எதிராக போராட வைத்தது அமெரிக்கா, அதில் ஒரு போராளி பின்லேடன்

பின் அந்த பின்லேடன் அமெரிக்காவினை படுத்தியபாடு கொஞ்சமல்ல, இன்றுவரை அச்சுறுத்தல் உண்டு

அதே ஆப்கன் தவறை இன்று சிரியாவில் மீண்டும் செய்கின்றது அமெரிக்கா, இன்னொரு லேடன் வந்து அடிக்கும்பொழுது அது தெரியும்

உண்மையினை மறைப்பதில் கில்லாடிகள் அவர்கள், இதே அமெரிக்கபடை குண்டுவீச்சில் ஆப்கனில் ஏகபட்ட சிறுவர் சிறுமிகள் முன்பு கொல்லபட்டனர், சர்ச்சையானது

பின் தாலிபான்களிடம் தப்பிய மலைலாவினை போராளியாக்கி, அவருக்கு நோபல் பரிசு கொடுத்து தாங்கள் மகா உத்தமர் போல காட்டிகொண்டனர் மேற்குலகத்தார்

இந்த அல்கய்தா,தாலிபன் எல்லாம் யார் உருவாக்கினார் என்றால் சாட்சாத் அமெரிக்கா. ஆக மலைலா சுடபட மூல காரணம் அவர்கள்தான். கொஞ்சம் யோசித்தால் மலைலா அவர்கள் முகத்தில் காரி துப்பியிருக்கும்

ஆனால் அப்பாவி சிறுமிக்கு சொல்லிகொடுப்பது யார்? பாவம். அது மேற்குலகம் தன்னை காப்பாற்றியதாய் நம்பிகொண்டிருக்கின்றது

அமெரிக்க, ஐரோப்பியரின் ஒவ்வொரு விருதிலும், ஒவ்வொரு நகர்விலும் ஏராளமான கணக்குகள் உண்டு. ஆழ நோக்கினால் தவிர புரியாது

விரைவில் பாருங்கள் சிரியாவில் இருந்தும் மலைலாக்கள் உருவாக்கபடலாம், ரஷ்யா கொடுங்கோலன் ஆகலாம்

உலகெல்லாம் ரஷ்யாவிற்கு எதிராக ஊர்வலம், கண்டன ஆர்பார்ட்டம் நடத்தபடலாம். செல்வு எல்லாம் அந்த சக்திகள் பார்த்துகொள்ளும்

எச்சில் கையினை வீசினால் ஆயிரம் காக்காய் என்பது போல மக்களை அவர்களால் திரட்டவும் முடியும்

ஆக இந்த திடீர் போராளிகள் குதிக்க முழு காரணம் அமெரிக்காவே அன்றி வேறுயாருமல்ல‌

சிரியாவிற்கு உலகெல்லாம் இருந்து கத்துபவர்கள் கத்த வேண்டிய இடம் அமெரிக்க தூதரகமே தவிர வேறு எங்கும் அல்ல‌

ஆனால் செய்யமாட்டார்கள், மாறாக சும்மா ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்