வருமானவரி துறை திடீர் சோதனை
இந்த வருமானவரி துறை சோதனை எனும் செய்தியினை கேட்டாலே எரிச்சல்தான் வருகின்றது
இபப்டித்தான் பரபரப்பாக சோதிப்பார்கள், ஏராளம் அள்ளினோம் என்பார்கள். அத்தோடு சரி
அது முறையான பணமா? இல்லையென்றால் இவர்களை சிறையில் தள்ளினார்களா? ஏதும் வழக்கு நடந்ததா என்றால் சத்தமே இருக்காது
ஒரு சாதாரண கிராமத்தானை கேட்டாலே சொல்வான், இந்த சசிகலா குடும்பம் என்ன வேலை செய்தது? எந்த முதலீடை கொண்டு சென்னைக்கு சென்றது? என்ன உழைத்தார்கள்? இவர்களுக்கு எப்படி பல்லாயிரம் கோடி சொத்து? இந்த விவேக் என்பவர் 30 வயதிற்குள்ளே ஜாஸ் சினிமாவினை வாங்க எங்கு சம்பாதித்தார்?
ஆக மிக எளிதான கேள்விகள், எல்லோர் மனதில் எழும்பு கேள்விகள்தான் இவை
இந்த சோதனைகளால் முடிவு வருமா என்றால் வராது, யாரும் தண்டிக்கபடுவார்களா என்றால் இல்லை
இங்கு வருமானவரிதுறை என்பது ஒரு ஆயுதம், பல இடங்களில் அது மிரட்டல், மிக சில இடங்களில் மிக லேசான கீறல். சசிகலாவிற்கு விழுந்தது போல
அதனை தாண்டி ஒன்றும் செல்லாது
சிங்கப்பூர் போல இதற்குத்தான் கடும் தண்டனை கொடுக்கவேண்டும், ஆனால் நாமெல்லாம் சாலை, மருத்துவமனை எல்லாம் சிங்கப்பூர் போல வேண்டும் என்போம் இதனை கண்டுகொள்ளமாட்டோம்
இந்த கமல், விஜய் எல்லாம் இதற்கு சிங்கப்பூர் போல கடும் தண்டனை வேண்டும் என சொல்லட்டும் பார்க்கலாம்?
ஜெயா டிவி அலுவலகம், தினகரன் வீடு உள்ளிட்ட சசிகலா அதிமுகவின் மகா முக்கிய 20 இடங்களில் ஐ.டி ரெய்டு : செய்தி
என்னது ஜெயா டிவியில் ரெய்டா?
இப்பொழுதுதான அந்த டிவி உண்மை பேச தொடங்கியிருந்தது, அது பொறுக்கவில்லையா?
ஏன் டிவிக்கள் உண்மையே பேசுவதில்லை என இப்பொழுதுதான் தெரிகின்றது.
உண்மையினை பேசதொடங்கிய ஜெயாடிவிக்கு வந்திருக்கும் சோதனை இது, ஆனால் இதனால் நிச்சயம் அரசுக்கு கெட்ட பெயர்தான் வரும்
எப்படிபட்ட அதிரடி உண்மைகளை அது சொல்லதொடங்கிற்று, அப்பொழுது ரெய்டு என்றால் என்ன காரணம் என யாருக்கு தெரியாது?
ஜெயாடிவியினை மொட்டை அடிக்கின்றார்கள், இனி இலை இல்லாமல்தான் டிவி வரும்போலிருக்கின்றது.