வள்ளியூர் பக்கம் கொடுமுடியாறு அணை திறப்பு
வள்ளியூர் பக்கம் கொடுமுடியாறு அணை திறப்பு, எம்.எல்.ஏ எம்.பி கலந்துகொண்டனர் : செய்தி
நெல்லை எம்பி என்றொருவர் உண்டு என்பதே அந்த படத்தினை பார்த்தபின்புதான் நினைவுக்கு வருகின்றது
அந்த அணை பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டபட்டதாக சொன்னார்கள், அந்த அணையின் அருகே இக்குளத்தால் 44 குளங்கள் பாசன வசதிபெறும் என அறிவிப்பு வேறு
அந்த வறண்ட பகுதிக்கு மிகபெரும் ஆறுதலாக அந்த அணை வரும் என எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் பெரும் ஏமாற்றம்
உண்மையில் அந்த அணையின் கொள்ளளவு 1 குளத்திற்கு கூட காணாது, அந்த அணை போல 3 அணைகள் இருந்தால்தான் பிரதான குளமே நிரம்பும், மீதி இருக்கும் 43 குளங்கள் நிலை அவ்வளவுதான்
அக்காலத்தில் மழைபெயதால் எல்லா குளங்களும் நிரம்பிகொண்டுதான் இருந்தன, நீரை தேக்குகின்றோம் என இதனை கட்டினார்கள்
மழை வந்து தானாய் குளங்கள் நிறைய இந்த அணை எதற்கு? தேவையே இல்லை
எல்லா குளங்களும் போல அதுவும் நிறைகின்றது, எல்லா குளமும் போல அதுவும் காய்கின்றது, ஆக மலையில் ஒரு குளம் கட்டிவைத்து அழகு பார்க்கின்றார்கள்.
அது அரை ஸ்பூன் அளவு கூட தேக்கும் அளவில்லை, கொஞ்சமும் பிரயோசனமில்லை
இந்த அணையால் என்ன பிரயோசனம் என்றால் ஒன்றே ஒன்றுதான்
ஆம் அணை திறக்கின்றோம் என ஆளாளுக்கு வந்து நிற்கின்றார்கள் அல்லவா? அந்த ஒரு விளம்பரம்தான்
நமக்கு தெரிந்த அநியாயம் இது, தெரியாமல் இப்படி தமிழகமெங்கும் எப்படி எல்லாம் விளையாடி இருக்கின்றார்களோ தெரியாது
வெள்ளையனுக்கு பின் உருப்படியான அணைகளை கட்டியது காமராஜர், ஆழியாறு, வைகை , மணிமுத்தாறு எல்லாம் அந்த ரகம்
அதன் பின் ஒரு அணையும் உருப்படியில்லை, எல்லாம் சும்மா வெட்டிவேலை
அதற்காக வீணாக்கபட்டிருக்கும் மக்கள் வரிபணம் ஏராளம்
இந்த கொடுமுடி அணை போல இன்னும் 50 அணை இருந்தால் அல்லவா இந்த குளங்கள் பாசன வசதிபெறும் என்று கேட்டால், அப்படியா 50 முறை இந்த அணையினை திறந்து மூடுவோம் சரியா என்பார்கள்
அதற்கு மேலும் கேட்டால் அமெரிக்கா, சீனா விட மிக சிறந்த அணைகட்டை நாங்கள் கட்டியிருக்கின்றோம் என்ற பதில் வரும்