வள்ளுவர் கோட்டம் திறக்கபட்ட நாள் இதே ஏப்ரல் 15
தமிழரின் மிகபெரும் அறிவு அடையாளம் திருகுறள், எல்லா தமிழரை போலவே கலைஞரும் அதனை நிரம்ப நேசித்தார், வழிபட்டார்
திருகுறளை எல்லோரும் கொண்டாடினார்கள். திருகுறள் கழகங்கள் எல்லாம் இருந்தது, கலைஞரும் அதில் கரைந்தார்
திருகுறளுக்கு அவர் உரையும் எழுதினார். அரசு பேருந்து எல்லாம் திருவள்ளுவரின் குறள் வந்தது
வள்ளுவன் பெயரில் போக்குவரத்து கழகம் எல்லாம் வந்தது, வள்ளுவனுக்கு சிலை எல்லாம் அமைத்தார் கலைஞர்
அப்படிபட்ட கலைஞர் சென்னையில் பெரும் கோட்டம் ஒன்று கட்டினார். தேர் தோரண வாயில் அரங்கம் என மிக அட்டகாசமான கோட்டம் அது. குறள் எல்லாம் பொருளுடன் பொறிக்கபட்டிருந்தது
மிக பிரமாண்டமாக அதன் திறப்புவிழாவினை அவர் தொடங்க இருந்த நிலையில்தான் அவர் ஆட்சி கலைக்கபட்டது
ஆயினும் ஜனாதிபதி பக்ரூதின் அலி தலமையில் அது திறக்கபட்டது, சம்பிரதாயத்திற்கு கூட கலைஞர் அழைக்கபடவில்லை
அவர் அடிக்கல்நாட்டிய கல்வெட்டினை கூட அகற்றினார்கள்
நிச்சயம் அம்மனிதனை அப்படி நோகடித்திருக்க கூடாது, இந்திராவின் மிசா செய்த மிக கொடுமையான விஷயம் அது
மனதால் உடைந்தார் கலைஞர், ஆயினும் பின்னாளில் பதவி ஏற்கும்பொழுது அங்கே பதவி ஏற்று கண்ணீரை துடைத்துகொண்டார்
கலைஞரை மனதால் நோகடித்து அந்த வள்ளுவர் கோட்டம் திறக்கபட்ட நாள் இதே ஏப்ரல் 15
நல்ல வேளையாக அன்றெல்லம் ஜெயா அரசு இல்லை, இருந்திருந்தால் என்னாகும்? புதிய சட்டமன்ற கட்டத்தையே மருத்துவமனை ஆக்கியவர், வள்ளுவர் கோட்டத்தை கழிப்பிடமாக கூட மாற்றி தொலைத்திருப்பார், நிச்சயம் வாய்ப்பிருக்கின்றது
வள்ளுவர் கோட்டம் கலைஞரின் கனவு, அதுவே அவரை நோகடிக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தபட்டது. பின் தன் காயத்தை அங்கேயே ஆற்றியும் கொண்டார் கலைஞர்.