வழக்கம் போல காமெடியில் சிக்கிவிட்டார் செல்லூர் ராஜூ

வழக்கம் போல காமெடியில் சிக்கிவிட்டார் செல்லூர் ராஜூ

எகிப்து வெங்காயம் உடலுக்கு நல்லது என அவர் சொல்ல போக, இணையவாசிகள் காய்ச்சி எடுக்கின்றார்கள்

ஆனால் ஒரு விஷயம் உண்மை

நைல் நதி தீரத்தில் விளையும் பொருளுக்கு அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்தே மவுசு அதிகம்

பைபிளின் ஆபிரஹாம் எகிப்து தானியத்துக்கு அலைந்திருகின்றான், யூத கூட்டம் அங்கேயே காத்து கிடந்தது

எகிப்தின் மாதுளைபழங்களை அனுதினமும் வரவைப்பானாம் சாலமோன் அரசன், அது உடலுக்கு நல்லது என்பது அவன் குறிப்பு

நெப்போலியன் முதல் ஹிட்லர் வரை எல்லோருக்கும் எகிப்தின் விளைச்சல் மேல் ஒரு கண் இருந்தது

எகிப்தினை தன் கட்டுபாட்டில் எடுக்க சோவியத் முயன்ற காலமும் உண்டு, ஒரே காரணம் அந்த மண்ணும் விளைச்சலும்

எகிப்து பழவகைகளை எல்லாம் ஜாபா எனும் இஸ்ரேலிய நகரத்தில் விளைய வைத்தனர் யூதர்கள்

இன்றும் யூத விளைச்சல் என்றால் உலக இஸ்லாமிய நாடுகள் வாங்காது என்பதால் கள்ளதனமாக எகிப்து பெயரிலே விற்கின்றது இஸ்ரேல்

எகிப்தின் விளைச்சலுக்கு என்றுமே ஒரு தனி சிறப்பு உண்டு, அது எக்காலமும் உண்டு

கோதுமை முதல் மாதுளை வரை எகிப்து பொருளை உலகம் இன்றும் தேடிகொண்டிருக்கின்றது

செல்லூர் ராஜூ சொன்ன விஷயம் உலகில் சாதாரண விஷயம், அதை கொஞ்சம் ஓவராக சொல்லிவிட்டார் போல..

இந்த விஷயத்தில் அவர் சொன்னது ஓரளவு சரிதான்