வாஜ்பாயினை பற்றி எழுதினால் அது பாஜக ஆதரவு ஆகாது

கலைஞர் இருந்தவரை தேசிய‌ பெரும் தலைவர்கள் மறைந்தால் அவர்ளுடனான தனது நட்பினை குறித்து சிலாகித்து எழுதுவார்

அப்படியே அவர்கள் மூலம் திமுக அரசு தமிழகத்திற்கு பெற்று தந்த நன்மைகளை அடிக்கோடிட்டு காட்டுவார்

வாஜ்பாயும் திமுகவும் மிசா காலத்தில் இருந்தே நெருக்கமாக இருந்தனர்

டெசோவில் வாஜ்பாயின் பங்கு அதிகம், ஈழதமிழருக்காக வாஜ்பாய் மூலம் அகில இந்திய ஆதரவினை திமுக திரட்ட முயன்று பிரபாகரனின் சக இயக்க படுகொலைகளால் அது நின்றதெல்லாம் வரலாறு

தேசிய அரசியலில் திமுகவினை முதலில் பங்கெடுக்க வைத்து, அவர்களை மத்தியில் முதலில் அமைச்சர் ஆக்கியதே வாஜ்பாய்

முரசொலி மாறனுக்கு பெரும் அடையாளம் வாஜ்பாய் அரசில் கொடுக்கபட்டு, அவர் செய்த பெரும் தொழில் ஈர்ப்பு முயற்சிகள் ஏராளமானவை, டோகா மாநாட்டில் பேசிய மாறன் உலக கவனத்தை பெற்றிருந்தார்

இப்படி திமுக பக்கம் எழுத நிறைய இருக்கின்றது, எழுதி அஞ்சலி செலுத்த மிக உகந்த நேரமிது

கலைஞர் இல்லை என்றால் இன்னொருவராவது எடுத்து எழுத கூடாதா?

மிக பெரிய வெற்றிடம் திமுகவில் தெரிகின்றது

கட்சி நிலைப்பாடு பற்றியும், தேசிய அரசியலில் அதன் நிலைப்பாடு பற்றியும் விளக்க கிடைத்திருக்கும் அட்டகாசமான வாய்ப்பினை கோட்டை விட்டு நிற்கின்றது திமுக‌

இதை செய்ய வேண்டிய திமுகவினர் அதை எல்லாம் விட்டுவிட்டு யாரை எல்லாமோ அடிக்கடி நம்மையும் கடுமையாக திட்டிகொண்டிருக்கின்றனர்

(வாஜ்பாயினை பற்றி எழுதினால் அது பாஜக ஆதரவு ஆகாது

வாஜ்பாய் போல நல்லவர்கள் பாஜக தலைவராக இருந்தால் திமுகவிற்கு என்றுமே தயக்கமில்லை என கலைஞர் ஸ்டைலில் முடித்தால் தீர்ந்தது விஷயம்

இதை கூட செய்ய தெரியாதவர்கள் என்ன சாதிக்க போகின்றார்கள்)