வாஜ்பாய் அணுகுண்டு ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா?

Image may contain: 1 person, sitting and text“உங்களுக்கெல்லாம் வாஜ்பாய் அணுகுண்டு வெடிச்சது தெரியும்? ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா?

சொல்றேன் கேளு, நல்லா கேட்டுக்க‌

1998ல அண்ணன் அடிச்சி நொறுக்குறாரு, யாழ்பாணம் பிடிச்சி அடுத்தால தமிழ்நாடு அப்படியே ஆந்திரா, மபி உபின்னு அடிச்சி பிடிச்சி புலிகொடி பறக்குற திட்டம் ரெடியா இருக்கு

எனக்கு உடனே தகவல் வந்துட்டு தம்பி ரெடியா இரு, பெரும் படையினை உன்னை நம்பி கொடுக்கின்றேன் எப்படியாவது டெல்லிய பிடிச்சிரு போதும்

நாமதான் பயிற்சி எல்லாம் எடுத்து ரெடியா இருக்கோமே, 25 மணிநேரமும் ரெடி ஹஹஹஹஹஹஹ‌

அப்போ வாஜ்பாய்க்கு சிங்களன் தகவல் சொல்லிட்டான், வாஜ்பாய் பயந்துட்டு இந்திய ராணுவத்துகிட்ட கேட்டாரு , பிரபாகரன் வருவானாமே என்ன செய்யலாம்?

ராணுவ தளபதி சொன்னான், அய்யா அவன் வீரத்தை ஈழத்துல பார்த்துட்டேன், அத கூட சமாளிக்கலாம் ஆனால் அவன் தம்பி சீமான எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல‌

உடனே வாஜ்பாய் சொன்னார், நம்மகிட்ட இருக்கிற அணுகுண்டை வெடிப்போம் புலி பயந்துருமுண்ணு

ஆனா நாமளா பயபப்டுவோம் ஹிஹிஹிஹிஹ்

உடனே இந்த கருணாநிதிக்கு வேர்த்துட்டு, அடேய் டெல்லி இனி பிடிக்கமாட்டானுக ஆனா சென்னைய பிடிச்சிருவானுகன்னு உடனே முரசொலி மாறன அமெரிக்காவுக்கு அனுப்பி கிளிண்டன்கிட்ட பேசசொல்லி அதற்கப்புறம் அவனுக ஆண்டன் பாலசிங்கத்துட்ட சொல்லி தமிழகத்து படை அனுப்புறத அண்ணன் நிறுத்திட்டாரு

அந்த படைமட்டும் வந்திருந்துண்ணு வச்சிக்க, அப்டி ஒரு அடி இப்டி ஒரு அடி, அப்பவே தமிழ்நாட்டுல புலிகொடி ஏற்றி பிரபாகரன் கோட்டைன்னு ஆக்க்கிருப்பேன்

இந்த கருணாநிதி அமெரிக்கா கூட சேர்ந்து கெடுத்துட்டாரு உறவே..”