வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் : வைகோ
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
இந்த அரசுக்கு விழுந்து விழுந்து ஆதரவு தெரிவித்தவரும் இவர்தான், ரகசிய வாக்கெடுப்பு தேவையில்லை, பழனிச்சாமி முதல்வர் ஆக வேண்டும் என சொன்னவரும் இவர்தான்
இன்று ஒப்பாரி வைப்பவரும் இவர்தான்
இவரை பற்றி சமீபத்தில் ராதாரவி சொன்னதுதான் மிக சரி
ராதாரவியின் பேச்சு ஒன்றும் மாற்று திறனாளிகளை கிண்டல் செய்யவில்லை, மாறாக குறைபிரசவ குழந்தை, ஒப்புக்கு சப்பாணி என வழக்கில் இருக்கும் சொற்களைத்தான் சொன்னார்
இது மாற்றுதிறனாளிகளை குறிக்கிறது என்றால், கண்டிக்கபட வேண்டும் என்றால்
முடவன் பைபிள் கொம்பு தேனுக்கு ஆசைபடலாமா, செவிடன் காதில் ஊதிய சங்கு எனும் பழமொழியினை எல்லாம் மாற்றவேண்டும்,
குருடன் குருடனுக்கு வழிகட்டலாமா என இயேசுவும், திருமூலரும் சொன்ன கருத்துக்கள் எல்லாம் கண்டிக்கபடவேண்டும், மாற்றபட வேண்டும்
அந்த புனித நூல்களை, பழமொழிகளை எல்லாம் அப்படியே வைத்துவிட்டு ராதாரவி ஏதும் சொன்னால் மட்டும்பொங்கிவிடுவார்களாம்
அவ்வளவு ஏன்? சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்ததும் நடக்க முடியாதவன் எல்லாம் நாடாள நினைக்கலாமா? என அதிமுகவினர் கேட்டது என்ன ரகம்?
அப்பொழுது எந்த மாற்றுதிறனாளியும் பொங்கியதாக தெரியவே இல்லை..
இலங்கை பொன்சேகா கூடத்தான் வைகோ கோமாளி என்றார், எந்த சர்க்கஸ் கோமாளியாவது கொந்தளித்தானா? அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது ஆம், வைகோ நம்மில் ஒருவர்.
இன்னும் புரியவில்லை என்றால் வைகோவின் சசிகலா ஆதரவினையும், இன்று பொங்கும் திடீர் தமிழக பாசத்தையும் நினைத்து பார்க்கவும்