வாரிசு அரசியல்

மாநில கட்சிகள் ஏன் வாரிசு அரசியலில் மாட்டிகொள்கின்றன?

விஷயம் ஒன்றுமில்லை

தேசிய கட்சி நாட்டு நலனை நிறுத்தும், நாடே பிராதனம் நாட்டு முன்னேற்றமும் பாதுகாவலுமே நலம் என கொள்கை கொண்டிருக்கும்

மாநில கட்சிகள் சுயநலமானவை, இந்தியர் என்ற நிலையிலிருந்து நாம், நமது மொழி நமது மொழி என அவர்கள் வட்டம் சுருங்குகின்றது

அது அதன் பின் தன்வீடு தன் குடும்பம் என இன்னும் சுருங்குகின்றது

எந்த சுயநலத்தில் மாநில கட்சி கொடிபிடிக்கின்றார்களோ அதே சுயநலத்தில் ரகசியமாக குடும்ப நலனையும் கொண்டுவந்துவிடுகின்றார்கள்

அதுதான் அடிப்படை உண்மை

சுயநலங்களின் மொத்த உருவம் மாநில கட்சிகள், அது அந்த கட்சி தலைவர்களின் உண்மை உருவமான சுயநலத்தில் குடும்ப கட்சியாக மாறிவிடுகின்றன‌

தேசம் என நாட்டை நேசிப்பவர்களுக்கு அந்த சிக்கல் இல்லை, அக்கட்சிகளிலும் வாரிசு சிக்கல் இல்லை காங்கிரஸ் தவிர‌

தேசிய கட்சிகள் என்பது சேவை, மாநில கட்சிகள் என்பது தனியார் கம்பெனி

அது திமுக முதல் ராஷ்டிரிய ஜனதாதளம் வரை நாடெல்லாம் பல கம்பெனிகளில் தெரிகின்றது.