வாழ்க்கைதான் வான்வெளி அறிவியல்…
ஓவ்வொரு விஷயமும் அடுத்த கட்டத்தை தாண்டியவுடன் பிரிய வேண்டும் என்பது இயற்கையின் விதி
மானிட வாழ்வில் அது வழமை, ஒரு கட்டத்தில் தாய் தந்தையினை பிரிவது, பிள்ளைகளை பிரிவது என்பது வாழ்க்கை நிலைப்பாட்டின் மைல் கல்
அல்லது பிள்ளைகளை சுமந்து வளர்த்து பிரிந்தபின் பெற்றோரின் கடமை முடிகின்றது, பிள்ளைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஒரு கட்டத்தில் நிறுத்தியபின் முடிகின்றது
ஏன் பறவை கூட பறக்க கற்றுகொடுத்தபின் பிரிகின்றது, மிருகங்களும் மீன்களும் கூட அப்படியே
விஞ்ஞானத்திலும் இத்தத்துவம் உண்டு.
செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டில் அது பறக்க பறக்க ஒவ்வொரு பூஸ்டராக கழன்று விழும், எரிபொருள் தீர்ந்தபின் அது தேவையில்லை
பின் ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள் பிரியும்
அப்படி இந்த சந்திராயனை நிலாவுக்கு கொண்டு சென்ற ராக்க்கெட்டில் இருந்து தனியாக சந்திராயன் கலம் பிரிந்திருக்கின்றது
இனி சந்திராயன் கலம் பத்திரமாக தரையிரங்க வேண்டும், அதிலிருந்து முட்டையிலிருந்து வரும் குஞ்சு போல சந்திராயன் வெளிவந்து ஆய்வினை தொடங்கும்
வாழ்க்கைதான் வான்வெளி அறிவியல்…
எல்லா உறவுகளும் ஒரு கட்டத்தில் பிரியும் அதை தவிர்க்கவே முடியாது என்பது முக்கால தத்துவம் விஞ்ஞானத்தில் கூட..